மோசமான தோல்வி
சென்னை அணி இந்தப் போட்டியில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 132 ரன்கள் மட்டுமே சேர்க்க, அடுத்து ஆடிய ஹைதராபாத் 16.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி அசத்தியது.
ரசிகர்கள் கேள்வி
தோனி இல்லாததால் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்தது என்ற முடிவுக்கு வந்த தோனி ரசிகர்கள், தோனி அடுத்த போட்டியிலாவது ஆடுவாரா.. மாட்டாரா? என கேட்டு வருகின்றனர்.
சுரேஷ் ரெய்னா பதில்
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின் பேசிய சுரேஷ் ரெய்னா, தோனி தற்போது நன்றாக இருக்கிறார். அவரது முதுகில் பிரச்சனை இல்லை. அடுத்த போட்டியில் அவர் ஆட வாய்ப்புள்ளது" என கூறினார். உறுதியாக ஆடுவார் என கூறாவிட்டாலும், தோனி நிச்சயம் அடுத்த ஐபிஎல் போட்டியில் ஆடுவார் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அடுத்த போட்டி எப்போது?
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடும் அடுத்த போட்டி வரும் ஏப்ரல் 21 அன்று நடைபெற உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக ஆட உள்ளது சென்னை. அந்தப் போட்டியில் தோனி களமிறங்குவாரா?