நீக்கம்
இந்த நிலையில், இந்த தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத மூன்று வீரர்களை கொல்கத்தா அணி நீக்கியுள்ளது. குல்தீப் யாதவ், ராபின் உத்தப்பா, பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவரும் இந்த முறை ஐபிஎல் தொடரில் மோசமான செயல்பாட்டை அளித்துள்ளனர்.
மோசமான செயல்பாடு
அதிலும் குறிப்பாக, பெங்களூர் அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 59 ரன்கள் கொடுத்திருந்தார். அதே போட்டியில் 214 ரன்களை சேஸ் செய்த போது, உத்தப்பா 20 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து அணியை இக்கட்டான நிலைமைக்கு கொண்டு சென்றார்.
முன்னணி பந்துவீச்சாளர்
இதையடுத்து, இவர்கள் இருவரையும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து நீக்கியுள்ளது கொல்கத்தா. இவர்களில் குல்தீப் யாதவ் சர்வதேச போட்டிகளில் கில்லியாக செயல்பட்டு வந்தவர். டி20 மற்றும் ஒருநாள் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசித் நீக்கம் ஏன்?
பிரசித் கிருஷ்ணா உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வரும் வீரர். பிரசித் கிருஷ்ணா இந்த ஐபிஎல் தொடரில் பந்துவீச்சு சராசரியாக, ஓவருக்கு 9 ரன்கள் வைத்துள்ளார். பெங்களூர் போட்டியில் 4 ஓவர்களில் 52 ரன்கள் கொடுத்திருந்தார்.