முஜீப் ஓவரில்..
18வது ஓவரின் முதல் பந்தை கேன் வில்லியம்சன் எதிர்கொண்டார். ஏற்கனவே, 3 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து சோகத்தில் இருந்த முஜீப் உர் ரஹ்மான் பந்து வீச வந்தார். அவர் வீசிய முதல் பந்தை வில்லியம்சன் அடித்தார்.
தடுக்க முயன்றார்
பந்தை பிடிக்க கிறிஸ் கெயில் மிக வேகமாக ஓடி வந்தார். பவுண்டரி எல்லைக்கு சில அடி தூரம் முன்பு பந்துக்கு அருகே வந்தார் கெயில். எப்படியும் பந்தை பிடித்து விடுவார் என பார்த்தால், காலால் பந்தை தடுக்க முயன்றார் கெயில்.
என்ன செய்தார்?
ஆனால், கெயில் ஓடி வந்த வேகத்தில் பந்தை தடுப்பதற்கு பதில் எட்டி விட்டார். பந்து வேகமாக பவுண்டரியை கடந்து ஃபோர் ஆனது. ஏற்கனவே, ஹைதராபாத் அடித்து, துவைத்து வந்த நிலையில், கெயில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்.
சோகத்தில் முஜீப்
இதைக் கண்ட பஞ்சாப் ரசிகர்கள் கடுப்பானார்கள். அதை விட சோகம், முஜீப் வீசிய அந்த 18வது ஓவரில் மட்டும் 26 ரன்கள் சேர்த்தது ஹைதராபாத். இது ஒரு புறமிருக்க, 213 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு கெயில் 4 ரன்களில் ஆட்டமிழந்து கடும் அதிர்ச்சி அளித்தார்.