56 லீக் ஆட்டங்கள்
இன்று தொடங்கி மே 5-ம் தேதி வரை நடைபெறும். 56 லீக் சுற்று போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
சிஎஸ்கே 14ல் வெற்றி
பெங்களூரு அணியுடன் 22 முறை மோதியுள்ள சிஎஸ்கே அணி 14 வெற்றி, 7 தோல்வியை பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு இல்லை.
காத்திருக்கும் சாதனை
இந்நிலையில், இன்றைய போட்டியில் சென்னை அணியின் சுரேஷ் ரெய்னாவுக்கு சாதனை படைக்க வாய்ப்பு காத்திருக்கிறது. ரெய்னா 15 ரன்கள், விராட் கோலி 52 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த வீரர்கள் என்ற சாதனையை படைப்பர்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
2 முக்கிய சாதனைகள் இந்த முதல் போட்டியில் நடக்கும் என்று தெரிகிறது. ஆகையால்.. வழக்கத்துக்கு மாறாக.. இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.