செம
முதலில் மெதுவாக ஆடினாலும் போக போக அம்பதி ராயுடு வேகம் காட்டதொடங்கினார். தேவையான பந்துகளில் சிக்ஸ், பவுண்டரி என்று அடித்து அதிரடி காட்டினார். வேகமாக ஆட தொடங்கிய ராயுடு இந்த தொடரின் முதல் வீரராக 50 ரன்களைகடந்து 71 ரன்களை எடுத்தார். மிகவும் கடுமையான பிட்சில், வலிமையான பவுலர்களை எதிர்கொண்டு, அம்பதி ராயுடு கலக்கினார்.
எப்படி ஆடினார்
அதிலும் இவர் பார்ம் அவுட்டில் இருக்கிறார். சரியாக ஆட மாட்டார் என்று இவருக்கு எதிராக நிறைய கணிப்புகள் வைக்கப்பட்டது. ஆனால் அம்பதி ராயுடு எதையும் கருத்தில் கொள்ளாமல் கவலையே இன்றி களத்தில் நிதானமாக ஆடினார். இதன் மூலம் தனக்கு எதிரான சில விமர்சனங்களுக்கு இவர் பதிலடி கொடுத்துள்ளார்.
என்ன பதிலடி
கடந்த உலகக் கோப்பை தொடரில் இவர், தன்னை அணியில் எடுக்கவில்லை என்று கடுமையாக புகார்களை வைத்தார். விஜய் சங்கர் போன்றஅனுபவம் இல்லாத வீரர்களை அணியில் எடுத்ததை இவர் கிண்டல் செய்து இருந்தார். ஆனால் இவருக்கு எதிராக தேர்வு கமிட்டி கடுமையாக புகார்களை குவித்து, விமர்சனங்களை வைத்தது.
ஓய்வு அறிவித்தார்
விஜய் சங்கரை 3டி வீரர் என்று அம்பதி ராயுடு கிண்டல் செய்து இருந்த நிகழ்வும் நடந்தது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர் புறக்கணிப்பு காரணமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கூட அம்பதி ராயுடு அறிவித்தார். அதன்பின் மீண்டும் ஓய்வில் இருந்து திரும்பி வந்தார். ஆனால் இவருக்கு அணியில் யாரும் வாய்ப்பு கொடுக்கவே இல்லை.
பதிலடி
இந்திய அணியில் நான்காவது இடத்தில் விளையாட வேண்டும் என்பதுதான் இவரின் ஒரே நோக்கம். அந்த இடத்திற்கு நான்தான் சரியான ஆள்என்பதை இன்றைய போட்டியின் மூலம் ராயுடு நிரூபித்து இருக்கிறார் . தனக்கு எதிரான விமர்சனங்கள், தேர்வு குழுவின் அவமானங்களுக்கு எல்லாம் ஒரே போட்டியில் ராயுடு பதிலடி கொடுத்துள்ளார்.