என்ன நடந்தது
ரசலின் ஆட்டம் குறித்து பேட்டி அளித்துள்ள மெக்கலம், ரசல் கொல்கத்தா அணிக்காக களமிறங்கி ஆட வந்தார். ஆனால் அவர் முழுமையாக குணமடையவில்லை. அவர் முழு பிட்னசில் இல்லை. ஆனாலும் அவர் அணிக்காக களமிறங்கினார். இதனால் அவரால் பவுலிங் செய்யவும் முடியவில்லை.
ராஜஸ்தான்
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மிக முக்கியமானது. அதனால்தான் அவர் களத்திற்கு வந்தார். அவர் ஆபத்தான சூழ்நிலையில் இருந்தார். ஆனால் அணி வெற்றி பெற வேண்டும், முக்கியமான போட்டி என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதனால் ரசல் தனது காயத்தை பொருட்படுத்தவில்லை.
களத்திற்கு வந்தார்
அவர் உடனே களத்திற்கு செல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருந்தார். அணிக்காக எதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் 100% குணமடையவில்லை. ஆனாலும் அணிக்காக ஆடுகிறார். அவர் ஒரு 15-20 நிமிடம் ஆடினார். மொத்தமாக ஆட்டத்தையே மாற்றிவிட்டார்.
தூண் போல இருக்கிறார்
அவர் எங்கள் அணியின் தூண் போல இருக்கிறார். இதனால்தான் காயத்தை கூட அவர் கணக்கில் கொள்ளவில்லை. அவர் உலகின் சிறந்த டி 20 வீரர்களில் ஒருவர். அவர் இந்த சீசனில் சரியாக ஆடவில்லை.. ஆனால் ஒரே ஒரு போட்டியில் அவர் பார்மிற்கு திரும்பினால் போதும் எல்லாமே மொத்தமாக மாறிவிடும், என்று அணியின் பயிற்சியாளர் மெக்கலம் கூறியுள்ளார்.