2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் பிரம்மாண்டமான முறையில் மார்ச் 29 அன்று துவங்க இருந்தது. இதற்கான ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத இருந்தன.
கொரோனா பாதிப்பு
இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதன் எதிரொலியாக பல விளையாட்டுத் தொடர்கள் உலகம் முழுவதும் தள்ளி வைக்கப்பட்டன அல்லது பாதியில் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கும் அதே நிலை ஏற்பட்டது.
மாநிலங்கள் போர்க்கொடி
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் ஐபிஎல் போட்டியை தங்கள் மாநிலத்தில் நடத்த எதிர்ப்பு தெரிவித்தன. டெல்லி அரசும் ஐபிஎல்-லுக்கு தடை விதிக்க உள்ளதாக கூறியது.
டிக்கெட் விற்பனைக்கு தடை
மகாராஷ்டிராவின் மும்பை நகரில் முதல் ஐபிஎல் போட்டியான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கு டிக்கெட் விற்க தடை விதிக்கப்பட்டது. அதனால், ஐபிஎல் போட்டி நடத்துவதில் கடும் சிக்கல் ஏற்பட்டது. போட்டிகள் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடத்த பிசிசிஐ திட்டம் வகுத்து வந்தது.
விசா சிக்கல்
அப்படியே நடத்தினாலும், கொரோனா வைரஸ் அச்சத்தால் இந்திய அரசு ஏப்ரல் 15 வரை விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதனால், ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள வீரர்கள் விசா பெறுவதில் கடும் சிக்கல் எழுந்தது.
பிசிசிஐ கூட்டம்
இதனிடையே, ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து எட்டு ஐபிஎல் அணிகள், ஐபிஎல் நிர்வாகக் குழு மற்றும் பிசிசிஐ மார்ச் 14 கூட்டத்தில் விவாதிக்க இருந்தன. அந்தக் கூட்டத்தில் தான் இதற்கு முடிவு எட்டப்படும் என பரவலாக கூறப்பட்டது.
அணிகளின் மனநிலை
எட்டு ஐபிஎல் அணிகளும் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் ஆடுவதில் சிக்கல் இல்லை. ஆனால், வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் தொடரை நடத்த முடியாது. ரசிகர்கள் போட்டிகளை பார்க்க மாட்டார்கள் என்ற மன நிலையில் இருந்தனர்.
கங்குலி அதிரடி முடிவு
இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் சில அதிகாரிகள் மட்டும் சந்தித்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவில், ஐபிஎல் அணிகளை கேட்காமல், 2020 ஐபிஎல் தொடரை தள்ளி வைக்க அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
இந்திய அரசு ஏப்ரல் 15 வரை விசா வழங்காது என்பதால் அதுவரை தொடரை தள்ளி வைக்கவும், வெளிநாட்டு வீரர்களுக்கு ஏப்ரல் 15க்கு பின்னரே விசா கிடைக்கும் என்பதால் தொடரை அதுவரை தள்ளி வைத்துள்ளது பிசிசிஐ.
அணிகள் அதிர்ச்சி
மார்ச் 14 நடக்க இருந்த பிசிசிஐ கூட்டத்தில் எட்டு அணிகளிடமும் கலந்து ஆலோசிக்காமல் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது அதிர்ச்சி அந்த அணிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இது சரியான முடிவு தான் என்றாலும் பாதிக்கப்படும் அனைவரையும் பிசிசிஐ ஆலோசிக்கவில்லை.