டிரான்ஸ்பர்
இந்த நிலையில் சிஎஸ்கே அணி தற்போது தொடருக்கு இடையே புதிய வீரர்களை ஏலம் எடுக்க யோசித்து வருகிறது. அதாவது தொடர் நடந்து கொண்டு இருக்கும் போதே டிரான்ஸ்பர் முறைப்படி, மற்ற அணிகளில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வீரர்களை அணிக்குள் எடுக்க சிஎஸ்கே நினைத்து வருகிறது. சிஎஸ்கேவின் பேட்டிங் திணறுவதால், இந்த முடிவை அந்த அணி எடுக்கும் என்கிறார்கள்.
அணியில் எடுக்கலாம்
தற்போது அணியில் இருந்து ரெய்னா வெளியேறி உள்ளார். ரெய்னா இந்த தொடர் முழுக்க கண்டிப்பாக திரும்ப வர மாட்டார். இதனால் இவரின் இடத்திற்கு புதிய வீரரை அணியில் எடுக்க சிஎஸ்கேவிற்கு அதிகாரம் உள்ளது. அதேபோல் இன்னொரு பக்கம் ஹர்பஜன் இடத்திற்கும் புதிய வீரர் ஒருவரை சென்னை தனது அணியில் எடுக்கலாம்.
யார் எல்லாம்
இதற்காக சென்னை அணி நிர்வாகம் புதிய லிஸ்ட் ஒன்றை எடுத்து வருகிறது என்றும் கூறுகிறார்கள். மொத்தம் 5 வீரர்களை சென்னை அணி குறி வைத்து உள்ளது. அதன்படி மும்பை அணியில் இருக்கும் கிறிஸ் லின்னை சென்னை அணி குறி வைத்து உள்ளது. மும்பையில் நிறைய ஓப்பனர்கள் இருப்பதால் இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை .
யார் எல்லாம் ஒப்பனர்கள்
கிறிஸ் லின்னை மும்பை அணி அடிப்படை விலைக்கு மட்டுமே ஏலம் எடுத்தது. ஆனாலும் அவரை சரியாக பயன்படுத்தவில்லை. இவர் பிஎஸ்எல் 2020 போட்டியில் பார்மிற்கு திரும்பினார். தற்போது சிறப்பான பார்மில் இருக்கிறார். இதனால் போட்டிக்கு இடையே இவரை முரளி விஜய்க்கு மாற்றாக சென்னை தங்கள் அணிக்கு இழுக்க வாய்ப்புள்ளது.
வாய்ப்பு
அதேபோல் பெங்களூர் அணியில் இருக்கும் ஜோஷ் பிளிப் சென்னை அணியின் ஒன் டவுன் பிரச்சனையை தீர்க்க வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த விக்கெட் கீப்பரான இவரை பெங்களூர் நன்றாக பயன்படுத்தி வருகிறது . ஆனால் பெங்களூரில் ஒன் டவுன் பிரச்சனை இல்லை என்பதால், இவரை பெங்களூர் அணி சென்னைக்கு கொடுக்கவும் வாய்ப்புள்ளது .
வேறு யார் எல்லாம்
அதேபோல் கொல்கத்தாவில் இருக்கும் இங்கிலாந்து வீரர் கிறிஸ் பண்டன் சென்னைக்கு வர வாய்ப்புள்ளது . இவரை கடந்த ஏலத்தின் போதே சென்னை அணி எடுக்க விரும்பியது . கொல்கத்தாவில் நல்ல பேட்டிங் ஆர்டர் இருப்பதால் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை. இதனால் இவர் சிஎஸ்கேவிற்கு மாற்றப்படலாம். இதேபோல் ஜார்க்கண்டை சேர்ந்த விராட் சிங், அண்டர் 19ல் இருக்கும் ஸ்பின் பவுலர்களை சென்னை அணி குறி வைத்து வருகிறது.