பேட்டி
சென்னையின் தோல்விக்கான காரணங்களை தற்போது சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அடுக்கி உள்ளார். அதில், சென்னை அணியின் பேட்டிங்தான் அணிக்கு எதிராக இருக்கிறது. அணியின் பேட்டிங் ஆர்டரை அடிக்கடி மாற்றுவது எங்களின் ஸ்டைல் இல்லை. அதனால் அணியின் பேட்டிங் ஆர்டரில் பெரிய மாற்றம் செய்ய போவது இல்லை. ரெய்னா, ராயுடு இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேட்டிங் ஆர்டர்
சென்னை பேட்டிங் ஆர்டர் இதனால் மோசமாகி உள்ளது. சில முக்கியமான வீரர்கள் அணியில் இல்லை. இதனால் அணியின் சமநிலை பாதித்து இருக்கிறது. முக்கியமான வீரர்கள் இல்லாத காரணத்தால் இருக்கிற வீரர்களை எப்படி பயன்படுத்துவது என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொடரின் தொடக்கத்திலேயே சில சோதனை முயற்சிகளை செய்கிறோம்.
விரைவில் முக்கிய முடிவு
விரைவில் முக்கியமான முடிவுகளை எடுப்போம். எங்களிடம் சில ஹிட்டர்கள் உள்ளனர். ஆனால் அவர்களை இன்னும் பயன்படுத்தவில்லை. நாங்கள் என்ன செய்கிறோம் என்பதில் கொஞ்சம் தெளிவாக இருக்க வேண்டும். அணியின் தொடக்க வீரர்கள் சரியாக ஆடுவது இல்லை. அதுதான் கவலை அளிக்கிறது. நிறைய கேள்விகள் இருக்கிறது.
அழுத்தம் அதிகரிக்கும்
தொடக்க வீரர்கள் சொதப்பியதால் பிரஷர் அதிகரிக்கிறது. பயிற்சி அளிப்பதிலும் நிறைய கேள்விகள் எழுந்துள்ளது. மொத்தமாக அணியை மாற்றுவதும் சரி இல்லை. ஆனால் சில விஷயங்களை மாற்ற வேண்டும். இன்னும் 6 நாட்கள் இருக்கிறது. இந்த 6 நாட்களில் முக்கியமான மாற்றங்களை எடுக்க வேண்டும். சில முக்கியமான ஹெவி பிளேயர்களை களமிறக்காததுதான் அணியின் தோல்விக்கு காரணம்.
காரணம்
12 வருடமாக சென்னை அணிக்கு ஸ்பின் பவுலிங்தான் கை கொடுத்தது. ஆனால் இந்த முறை ஸ்பின் கை கொடுக்கவில்லை. வேறு ஸ்பின் பவுலர்களை நாங்கள் பயன்படுத்தினால் கண்டிப்பாக போட்டி எங்கள் பக்கம் மாற வாய்ப்புள்ளது. நாங்கள் கடைசியாக ஆடிய மூன்று போட்டிகளும் வேறு வேறு மைதானம் என்பதும், எங்களின் தோல்விக்கு காரணம் ஆகும், என்று பிளமிங் குறிப்பிட்டுள்ளார்.
ஓப்பனிங்
இதனால் அணியில் விரைவில் ஓப்பனர்கள், ஸ்பின் பவுலர்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதிலும் முரளி விஜய் போன்ற ஓப்பனிங் வீரர்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.