அடுத்த சீசன்
இதனால் சிஎஸ்கே அணி தற்போது அடுத்த சீசனுக்கு தயாராகி வருகிறது. அடுத்த சீசனில் சிறப்பான வீரர்களுடன் களமிறங்க சிஎஸ்கே அணி முடிவு செய்துள்ளது. வாட்சன் அணியில் இல்லை , அதேபோல் இன்னும் பல வீரர்கள் ஓய்வு பெற உள்ளனர் என்பதால் சிஎஸ்கே அணி புதிய வீரர்களுடன் களமிறங்க உள்ளது.
திட்டம் என்ன
இதற்காக சிஎஸ்கே அணி.. வருகின்ற ஏலத்தில் முக்கியமான வீரர்களை அணியில் எடுக்க இருக்கிறது. பிப்ரவரி மாதம் நடக்க உள்ள ஏலத்தில் பெரிய அளவில் வீரர்களை எடுக்க சிஎஸ்கே அணி திட்டமிட்டு இருக்கிறது. ஆனால் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ஏலம் நடக்குமா என்று கேள்விகள் எழுந்தது.
ஏலம் நடக்குமா?
இந்த நிலையில் பிப்ரவரி மாதம் கண்டிப்பாக ஏலம் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. பெரிய அளவில் ஏலம் நடக்கவில்லை என்றாலும் கூட முக்கியமான வீரர்கள் பலர் இன்னும் 3 மாதங்களில் ஏலம் விடப்படுவார்கள். அதேபோல் ஐபிஎல் தொடரும் ஏப்ரல் - மே மாதம் நடக்க உள்ளது.
உறுதி
ஏப்ரல் -மே மாதம் ஐபிஎல் தொடர் கண்டிப்பாக நடக்கும் என்று கங்குலி உறுதியாக அறிவித்து விட்டார். இதனால் தோனி திட்டமிட்டபடி இன்னும் சில மாதங்களில் மீண்டும் களமிறங்க உள்ளார். கடந்த போட்டியில் பேட்டி அளித்த தோனி... இன்னும் சில மாதங்களில் அடுத்த ஐபிஎல் சீசன் நடக்க உள்ளது. அதனால் நான் கண்டிப்பாக ஓய்வு பெற போவதில்லை, என்று திட்டவட்டமாக குறிப்பிட்டு இருந்தார் .
திட்டப்படி நடக்கும்
தற்போது தோனியின் திட்டப்படி இன்னும் 6 மாதங்களில் ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. இதனால் அவர் முறையாக பயிற்சி செய்து மீண்டும் பார்மிற்கு திரும்ப வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி பிப்ரவரியில் ஏலம் எடுத்துவிட்டு.. ஏப்ரல் - மே மாதத்தில் மீண்டும் புத்துணர்ச்சியோடு களமிறங்க வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.