தவறு
சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு ஒருவர் மட்டும் காரணம் என்று கூறிவிட முடியாது. ஜாதவ் மட்டும்தான் தவறு செய்தார். அவர்தான் அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தார் என்று கூறிவிட முடியாது. அணியின் தோல்விக்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. அணியில் இருக்கும் அனைவரும் இதற்கு காரணம்தான்.
தொடக்கம் எப்படி
தொடக்க காலத்தில் சிஎஸ்கே அணிக்கு ஓப்பனிங் இறங்கிய முரளி விஜய், வாட்சன் இருவரும் நன்றாக ஆடவில்லை. டெல்லி ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் இருவரும் சரியாக ஆடவில்லை. அதேபோல் கடைசியாக சில போட்டிகளில் டு பிளசிஸ் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இன்னொரு பக்கம் வாட்சன் எப்போதாவது மட்டுமே அதிரடியாக ஆடினார்.
ராயுடு
ராயுடு அவ்வப்போது அதிரடியாக ஆடினாலும், சில சமயம் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுகிறார். ஜாதவ் எல்லாப்போட்டியிலும் சொதப்பினார். பவுலிங் என்று எடுத்துக் கொண்டால் ஜடேஜா, சாகர், பிராவோ, கரன் சர்மா, சாவ்லா என்று யாருமே பெரிய அளவில் விக்கெட் டேக்கர்களாக இல்லை. பவுலர்கள் எல்லோருமே சொதப்பிவிட்டனர்.ஒரு பேட்ஸ்மேனாக ஜடேஜா மட்டுமே கொஞ்சம் நன்றாக ஆடினார்.
சிக்கல்
இதெல்லாம் போக இன்னொரு பக்கம் தோனியின் பேட்டிங் சரியில்லை. எந்த போட்டியிலும் தோனி சிஎஸ்கேவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆடவில்லை. அவரிடம் இருந்த பழைய வேகம், துல்லியம் எதுவும் இப்போது இல்லை. ஒரு கேப்டனாகவும் தோனி சரியாக ஆடவில்லை.பவுலிங் ரொட்டேஷன் தொடங்கி அணி தேர்வு வரை பல விஷயங்களில் தோனி கேப்டனாக சொதப்பி விட்டார்.
பயிற்சியாளர்
இன்னொரு பக்கம் பயிற்சியாளர் பிளமிங்கும் பெரிய அளவில் வீரர்களை தயார் செய்யவில்லை. மூத்த வீரர்கள் பார்ம் இல்லை என்று தெரிந்ததும் இளம் வீரர்களை தயார் செய்திருக்க வேண்டும். ஆனால் அதையும் கூட பிளமிங் செய்யவில்லை. மாறாக வீரர்களின் வயதை தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். ஒரு பயிற்சியாளராக பிளமிங் பொறுப்பாக செயல்படவில்லை.
கோபம்
இதன் காரணமாக மொத்தமாக அணியில் இருக்கும் எல்லோரின் மீதும் சிஎஸ்கே கடும் கோபத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணி நிர்வாகம் மொத்தமாக இவர்கள் மீது கோபத்தில் உள்ளது. அணியில் எல்லோரும் தவறான முடிவுகளை எடுத்துவிட்டனர். யாரும் வெற்றிபெற வேண்டும் என்று ஆடவில்லை. அதனால் மொத்தமாக இவர்களை மாற்ற வேண்டும் என்று சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது. ஆம் அணியில் விரைவில் முக்கியமான மாற்றங்கள் நடக்க உள்ளது.
மாற்ற வேண்டும்
மொத்தமாக அணியில் இருக்கும் பழைய வீரர்களை நீக்கிவிட்டு புதிய வீரர்களை எடுக்க வேண்டும். முக்கியமான வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை வெளியே அனுப்ப வேண்டும் என்று சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளது.
திட்டம் என்ன
2021 தொடருக்கு இப்போதே அணியை உருவாக்க வேண்டும். இப்போதே வீரர்களை தயார் செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்த வருடம் இது போன்ற சரிவை சந்திக்க முடியாது என்று சிஎஸ்கே நினைக்கிறது. இதனால் வெளிநாட்டு வீரர்கள்,டிஎன்பிஎல் வீரர்களை அணிக்குள் கொண்டு வர சிஎஸ்கே திட்டமிட்டு வருகிறது.