மாற்றம்
இந்த நிலையில் சென்னை அணியில் இருந்து லுங்கி நிகிடி நீக்கப்பட்டு உள்ளார். இவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹசல்வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர். 2020 ஐபிஎல் போட்டிக்கு முன்புதான் இவர் சிஎஸ்கே அணியில் ஏலம் எடுக்கப்பட்டார்.
யார் இவர் ?
ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான டெஸ்ட் வீரர் இவர். 2014ல் இந்திய அணிக்கு எதிராக இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். அசால்ட்டாக இவர் 146 -149 கிமீ வேகத்தில் பந்து வீச கூடியவர். 6.4 அடி உயரத்தில் இருக்கும் இவர் மிக எளிதாக பவுன்சர், யார்க்கர் வீசுவார்.
மாஸ்டர்
அதிலும் இவர் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட். கஷ்டமான நேரங்களில் கூலாக ஆட கூடியவர். முக்கியமாக இவர் சிறந்த பார்மில் இருக்கிறார். பெரிய அளவில் இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பார்ம் இழந்தது இல்லை. அந்த வகையில் சென்னை அணிக்கு இது நம்பிக்கை அளிக்கும் விஷயம்.
சென்னை போட்டி
இந்த நிலையில் சென்னை அணிக்காக இன்று இவர் வீசிய இரண்டாவது ஓவரில் 130, 133, 140, 146, 147 கிமீ வேகத்தில் பந்து வீசினார். மிக எளிதாக 147 கிமீ வேகத்தில் பந்துகளை வீசுகிறார். அதேபோல் இவர் 2 ஓவர் வீசி வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் இன்று இவர் டெத் ஓவர்களில் பவுலிங் போட வாய்ப்புள்ளது.