இந்திய அணி
இவரின் சிறப்பான பவுலிங் காரணமாகஇப்போது இந்திய அணியிலும் இவர் தேர்வாகி உள்ளார். ஆடும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு பதிலாக நெட் பயிற்சியில் பவுலிங் செய்ய இவர் தேர்வாகி உள்ளார். விரைவில் இவர் இந்தியாவின் ஆடும் அணிக்கும் தேர்வாக வாய்ப்புள்ளது.
ஏலம் எடுக்க வேண்டும்
இந்த நிலையில் இவரை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத் அணியில் ஆடும் நடராஜனை அந்த அணி எப்படியும் ரீ டெயின் செய்ய முடியாது. வார்னர், ரஷீத், கேன் வில்லியம்சன், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா போன்றவர்களை அந்த அணி ரீ டெயின் செய்யும்.
இதனால்
நடராஜன் ஏலம் விடப்பட வாய்ப்புள்ளது. வரும் பிப்ரவரி மாதம் இந்த ஏலம் நடக்க உள்ளது. இதில் நடராஜனை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு செலவு ஆனாலும், அவரை ஏலம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணி
சிஎஸ்கே அணியில் நல்ல டெத் பவுலர் இல்லை. இதனால் அணியில் எப்படியாவது நடராஜனை எடுத்தால்.. அது சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும், என்கிறார்கள்.
பயிற்சி
அதேபோல் தோனிக்கு கீழ் நடராஜனும் பயிற்சி பெற இது பெரிய அளவில் உதவியாக இருக்கும்.. நடராஜனின் எதிர்காலத்தில் இது பெரிய பங்கு வகிக்கும். இதனால் நடராஜனை அணியில் எடுக்க வேண்டும் என்று பலரும் சிஎஸ்கேவிற்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.