மும்பை
இதுவரை 7 போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை இன்று இன்னும் மோசமாக மும்பைக்கு எதிராக ஆடி உள்ளது. இன்று எப்படியாவது வென்று பிளே ஆப் கனவை சிஎஸ்கே தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அந்த கனவில் மண் அள்ளி போட்டுள்ளனர். மும்பைக்கு எதிராக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே பெரிய அவமானத்தை சந்தித்து உள்ளது.
சூப்பர்
சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள், மிடில் ஆர்டர் வீரர்கள் என்று யாருமே இன்று சரியாக ஆடவில்லை. முதல் 9 ஓவரில் சிஎஸ்கே 7 விக்கெட்டுகளை இழந்து பெரிய அளவில் அதிர்ச்சி அளித்துள்ளது. அதிலும் இன்று அணிக்குள் வாய்ப்பு கிடைத்த இரண்டு இளம் வீரர்கள் ரூத்துராஜ், ஜெகதீசன் இரண்டு பேருமே டக் அவுட் ஆனார்கள்.
டக் அவுட்
அதேபோல் அம்பதி ராயுடு இரண்டு ரன்னுக்கும், டு பிளசிஸ் 1 ரன்னுக்கும், ஜடேஜா 7 ரன்னுக்கும், தோனி 12 ரன்னுக்கும் தீபக் சாகர் டக் அவுட்டும் ஆனார்கள். அதிலும் தோனி, தீபக் சாகர் அவுட்டான விதம் எல்லாம் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வகையில் இருந்தது. ஜடேஜா அவுட்டான மிட் விக்கெட் கேட்ச் எல்லாம் பக்கா மும்பை பிளானிங் என்றுதான் சொல்ல வேண்டும்.
மும்பை
பொல்லார்ட் கேப்டனாக வழி நடத்திய மும்பை அணி இன்று நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு செயல்பட்டது. மிக சரியான பீல்டிங் செட்டப், சிறப்பான பவுலிங் ரொட்டேஷன் என்று இன்று பொல்லார்ட் நிகழ்த்திய மாயத்தை சிஎஸ்கே கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. சிஎஸ்கே அணி இன்று இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்ததில் தவறு இல்லை. ஆனால் மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கே இந்த ரிஸ்கை எடுத்து இருக்க கூடாது
ரிஸ்க்
அதிலும் பொல்லார்ட்தான் தற்போது உலகிலேயே நம்பர் 1 டி20 கேப்டன். உலகிலேயே அதிக டி20 போட்டிகளில் வென்ற கேப்டன் என்று பெயர் பொல்லார்டுக்குதான் இருக்கிறது. பல்வேறு லீக் ஆட்டம் உட்பட 299 டி20 போட்டிகளில் பொல்லார்ட் கேப்டனாக வென்று இருக்கிறார்.
இளம் வீரர்கள்
அவருக்கு எதிராக இளம் வீரர்களை களமிறக்கி சிஎஸ்கே இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தது முழுக்க முழுக்க தவறான விஷயம் ஆகும்... மும்பைக்கு எதிரான சிஎஸ்கேவின் இந்த சரிவு தோனியின் பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது.