For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

299 ரெக்கார்ட் நியாபகம் இருக்கா?.. இவர்கிட்ட போய் சிஎஸ்கே ரிஸ்க் எடுக்கலாமா.. தோனிக்கு பெரிய சரிவு!

துபாய்: சிஎஸ்கே அணியின் இன்றைய மோசமான ஆட்டம் கேப்டன் தோனிக்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் இதற்கும் மேல் அவமானத்தை சந்திக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு சிஎஸ்கே அணி நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது.

2020 வருடம் உலகம் முழுக்க பலருக்கும் மோசமான வருடமாக இருக்கிறது. ஐபிஎல் மட்டுமே விளையாட்டு உலகில் கொஞ்சம் மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயமாக இந்த வருடம் இருந்தது.

ஆனால் இந்த வருடம் அந்த ஐபிஎல் தொடரும் கூட சிஎஸ்கே அணிக்கு மிக மோசமாக அமைந்து உள்ளது. இதுவரை 10 சீசன்களில் சிறப்பாக ஆடி வந்த சிஎஸ்கே இந்த வருடம் மிக மோசமாக ஆடி மண்ணை கவ்வி உள்ளது.

மும்பை

மும்பை

இதுவரை 7 போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை இன்று இன்னும் மோசமாக மும்பைக்கு எதிராக ஆடி உள்ளது. இன்று எப்படியாவது வென்று பிளே ஆப் கனவை சிஎஸ்கே தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அந்த கனவில் மண் அள்ளி போட்டுள்ளனர். மும்பைக்கு எதிராக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே பெரிய அவமானத்தை சந்தித்து உள்ளது.

சூப்பர்

சூப்பர்

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள், மிடில் ஆர்டர் வீரர்கள் என்று யாருமே இன்று சரியாக ஆடவில்லை. முதல் 9 ஓவரில் சிஎஸ்கே 7 விக்கெட்டுகளை இழந்து பெரிய அளவில் அதிர்ச்சி அளித்துள்ளது. அதிலும் இன்று அணிக்குள் வாய்ப்பு கிடைத்த இரண்டு இளம் வீரர்கள் ரூத்துராஜ், ஜெகதீசன் இரண்டு பேருமே டக் அவுட் ஆனார்கள்.

டக் அவுட்

டக் அவுட்

அதேபோல் அம்பதி ராயுடு இரண்டு ரன்னுக்கும், டு பிளசிஸ் 1 ரன்னுக்கும், ஜடேஜா 7 ரன்னுக்கும், தோனி 12 ரன்னுக்கும் தீபக் சாகர் டக் அவுட்டும் ஆனார்கள். அதிலும் தோனி, தீபக் சாகர் அவுட்டான விதம் எல்லாம் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வகையில் இருந்தது. ஜடேஜா அவுட்டான மிட் விக்கெட் கேட்ச் எல்லாம் பக்கா மும்பை பிளானிங் என்றுதான் சொல்ல வேண்டும்.

மும்பை

மும்பை

பொல்லார்ட் கேப்டனாக வழி நடத்திய மும்பை அணி இன்று நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு செயல்பட்டது. மிக சரியான பீல்டிங் செட்டப், சிறப்பான பவுலிங் ரொட்டேஷன் என்று இன்று பொல்லார்ட் நிகழ்த்திய மாயத்தை சிஎஸ்கே கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. சிஎஸ்கே அணி இன்று இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்ததில் தவறு இல்லை. ஆனால் மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கே இந்த ரிஸ்கை எடுத்து இருக்க கூடாது

ரிஸ்க்

ரிஸ்க்

அதிலும் பொல்லார்ட்தான் தற்போது உலகிலேயே நம்பர் 1 டி20 கேப்டன். உலகிலேயே அதிக டி20 போட்டிகளில் வென்ற கேப்டன் என்று பெயர் பொல்லார்டுக்குதான் இருக்கிறது. பல்வேறு லீக் ஆட்டம் உட்பட 299 டி20 போட்டிகளில் பொல்லார்ட் கேப்டனாக வென்று இருக்கிறார்.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

அவருக்கு எதிராக இளம் வீரர்களை களமிறக்கி சிஎஸ்கே இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தது முழுக்க முழுக்க தவறான விஷயம் ஆகும்... மும்பைக்கு எதிரான சிஎஸ்கேவின் இந்த சரிவு தோனியின் பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, October 23, 2020, 21:33 [IST]
Other articles published on Oct 23, 2020
English summary
IPL 2020: CSK shouldn't have brought young players against Mumbai Indians today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X