அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்தது. தீபக் ஹூடா அதிரடி ஆட்டம் ஆடி 30 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார்.
அடுத்து ஆடிய சிஎஸ்கே அணி துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடியது. டுபிளெசிஸ் 48 ரன்கள் குவித்தார். ருதுராஜ் ஜெயிக்வாட் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் அரைசதம் கடந்தார்.
டுபிளெசிஸ் அவுட் ஆன பின் வந்த அம்பதி ராயுடு 30 ரன்கள் எடுத்தார், கடைசி வரை களத்தில் நின்ற ருதுராஜ் கெயிக்வாட் 49 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
பொங்கி எழுந்த தீபக் ஹூடா.. சரமாரி அடி.. கோட்டை விட்ட சிஎஸ்கே!
சிஎஸ்கே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி இந்த தோல்வியால் பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளது.