ருதுராஜ் கெயிக்வாட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2020 ஐபிஎல் தொடரில் இடம் பெற்றார் ருதுராஜ் கெயிக்வாட். தொடருக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பால் அவர் சரியாக பயிற்சி செய்யவில்லை. இந்த நிலையில் அவர் பங்கேற்ற மூன்று போட்டிகளில் சொற்ப ரன்கள் எடுத்தும், டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தார்.
ஸ்பார்க் இல்லை
இந்த நிலையில், சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த போது பேசிய அணியின் கேப்டன் தோனி, இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் ஜெகதீசனை குத்திக் காட்டி பேசி இருந்தார். அவர் பேச்சு பெரும் சர்ச்சை ஆனது.
மூன்று அரைசதம்
இந்த நிலையில், ருதுராஜ் கெயிக்வாட் சிஎஸ்கே அணியின் கடைசி மூன்று போட்டிகளில் மூன்று அரைசதம் அடித்தார். அந்த போட்டிகளில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு அவரே முக்கிய காரணமாக விளங்கினார். இதன் மூலம் அவர் முக்கிய சாதனை ஒன்றையும் படைத்தார்.
சாதனை
சிஎஸ்கே அணியில் வேறு எந்த வீரரும் தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரைசதம் அடித்ததில்லை. அந்த சாதனையை செய்த முதல் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் தான். இது சிஎஸ்கே அணியில் வரலாற்று சாதனை ஆகும்.
பதிலடி
ஸ்பார்க் இல்லை என்ற விமர்சனத்துக்கு சரியான பதிலடி கொடுத்தார் ருதுராஜ் கெயிக்வாட். இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு கிடைத்த சிறந்த வீரர்களுள் அவரும் ஒருவராக மாறினார். சாம் கர்ரன் துவக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டு வந்தார். இரண்டு நல்ல இளம் வீரர்களை பெற்றுள்ளது சிஎஸ்கே அணி.