பிளே-ஆஃப் மோதல்
2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளது. இதில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெற்ற அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. முதல் இரண்டு இடங்களில் இருக்கும் மும்பை - டெல்லி அணிகள் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் ஆட உள்ளன.
மீண்டு வந்த ரோஹித் சர்மா
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி உள்ளார். அவர் லீக் சுற்றின் இடையே காயம் காரணமாக பல போட்டிகளில் ஆடவில்லை. லீக் சுற்றின் கடைசி போட்டியில் அணிக்கு திரும்பிய அவர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தவான் என்ன சொன்னார்?
இந்த நிலையில், இந்தப் போட்டிக்கான திட்டம் பற்றி பேசிய ஷிகர் தவான், ரோஹித் சர்மா நல்ல வீரர். ஆனால், அவர் பல போட்டிகளில் ஆடாததால் டச்சில் இருக்க மாட்டார். அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம் என்றார். இந்திய அணியில் ஒன்றாக துவக்கம் அளித்து வந்தாலும் ஐபிஎல் தொடரில் அவர் காலை வாரி விட்டுள்ளார்.
மும்பை அணி மீது எதிர்பார்ப்பு
தவான் என்ன கூறினாலும், முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மீதுதான் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த அணியின் பந்துவீச்சு பலமாக இருப்பதால் அந்த அணி வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம் என கருதப்படுகிறது.