For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரா காரணம்?.. கொஞ்சமும் கண்டுகொள்ளாத ரோஹித்.. புறக்கணித்தது கோலி அல்ல.. வெளியான பரபர தகவல்!

துபாய்: மும்பை அணியின் இளம் வீரர் சூர்ய குமார் யாதவிற்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவே பெரிய அளவில் வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணியில் இருக்கும் சூர்ய குமார் யாதவ் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள கிரிக்கெட் தொடரில் இவரை தேர்வு செய்யவில்லை என்று புகார்கள் எழுந்த நிலையில் தற்போது இவர் இணையம் முழுக்க வைரலாகி வருகிறார்.

வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளும் ஆட உள்ளது .

தேர்வு இல்லை

தேர்வு இல்லை

இந்த அணியில் மும்பை வீரர் சூர்ய குமார் யாதவ் இடம்பெறவில்லை. இதன் காரணமாக இவருக்கு ஆதரவாக பலரும் இணையத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள். அதோடு நேற்று முதல் நாள் கோலியை சூர்ய குமார் யாதவ் கோபமாக முறைத்து பார்த்ததும் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

வைரல்

வைரல்

சூர்ய குமார் யாதவை கோலி அணியில் எடுக்கவில்லை. அரசியல் செய்கிறார். அதனால்தான் களத்தில் கோலி சூர்ய குமார் யாதவிடம் கோபமாக செயல்படுகிறார். கோலிக்கு ஈகோ அதிகமாக இருப்பதால் இப்படி சூர்ய குமார் யாதவை புறக்கணிக்கிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

விமர்சனம் என்ன

விமர்சனம் என்ன

இந்த நிலையில் சூர்ய குமார் யாதவை கோலி மட்டுமல்ல, தோனி, ரோஹித்தும் கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை. தோனி கேப்டனாக இருந்த போதும் சூர்ய குமார் யாதவ் கொஞ்சம் பிரபலம்தான். ஆனால் அப்போதும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல் ரோஹித் இந்திய அணியில் சில தொடர்களில் கேப்டனாக இருந்திருக்கிறார்.

கேப்டன்

கேப்டன்

நிதாஸ் கோப்பை தொடர் உள்ளிட்ட சில தொடர்களில் ரோஹித்தான் கேப்டன். அவர் நினைத்து இருந்தால் சூர்ய குமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்கி இருக்க முடியும். ஆனால் அவரும் கூட வாய்ப்பு வழங்கவில்லை. உலகக் கோப்பை தொடரில் விஜய் சங்கர் விலகிய போதும் சூர்யா அழைக்கப்படவில்லை. இதன் மூலம் இது கோலி மட்டும் சூர்ய குமார் யாதவை புறக்கணிக்கவில்லை.

காரணம்

காரணம்

மொத்தமாக இவரை தேர்வுக்குழு கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை என்கிறார்கள்.இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சூர்ய குமார் யாதவ் சில ஐபிஎல் தொடர்களில் மட்டுமே நன்றாக ஆடுகிறார். மற்ற எதிலும் சரியாக ஆடுவது இல்லை. முதல் தர போட்டிகளில் முக்கியமாக சரியாக ஆடுவது இல்லை. இதனால் தான் இவரை அணியில் எடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். இதில் அரசியலோ, ஈகோவோ எதுவும் இல்லை என்கிறார்கள்.

Story first published: Friday, October 30, 2020, 17:06 [IST]
Other articles published on Oct 30, 2020
English summary
IPL 2020: Even Rohith Sharma also didn't support Surya Kumar Yadav
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X