என்ன மாற்றம்
கடைசியாக டெல்லிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் கூட கடைசி ஓவரில் சொதப்பிய காரணத்தால் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. கடைசி ஓவரை வீச வேண்டிய பிராவோ காயம் காரணமாக வெளியேறினார். இதனால் ஜடேஜா கடைசி ஓவரை வீச.. சிஎஸ்கே தோல்வி அடைந்தது.
எப்படி
இந்த நிலையில் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் பிராவோ இன்னும் இரண்டு வாரங்கள் ஆடுவது கஷ்டம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு வாரங்கள் அவர் களத்திற்கு வர முடியாது. அதற்கு முன்பு வந்தாலும் கூட சிஎஸ்கே ஆடும் அடுத்த 2-3 போட்டிகளில் பிராவோ கண்டிப்பாக ஆடவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இன்று ஆட மாட்டார்.
ஆனால் என்ன
இதன் காரணமாக இன்று கண்டிப்பாக அணிக்குள் இம்ரான் தாஹிர் வருவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹசல் வுட் சேர்க்கப்பட்டுள்ளார். சிஎஸ்கேவில் இன்று சாம் கரன், டு பிளசிஸ், வாட்சன்,ஹசல்வுட் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் ஆடுவார்கள். மற்றபடி ப்ளெயின் லெவனில் இன்று மாற்றம் எதுவும் இல்லை. இத்தனை நாட்கள் சிஎஸ்கேவிற்கு பிராவோதான் டெத் ஓவர் வீசி வந்தார்.
டெத் ஓவர்
இதனால் தோனி அவரை நீக்க முடியாமல் கஷ்டப்பட்டார். பிராவோ டெத் ஓவர் வீசுவதால், அவரின் பேட்டிங் குறித்து தோனி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இதனால் பிராவோவை அணியில் இருந்து நீக்குவதை தோனி விரும்பவில்லை. இந்த நிலையில் விதியே தற்போது பிராவோவை நீக்க வைத்துள்ளது. பிராவோ காயம் காரணமாக கஷ்டப்படுவதால் ஹஸல்வுட் இன்று ஆடுவார்.
எப்படி
அமீரகத்தில் இருக்கும் பிட்ச்கள் ஸ்லோ பிட்சாக மாறி வருகிறது. இதனால் இம்ரான் தாஹிருக்கு பவுலிங் செய்ய வசதியாக இருக்கும். ஆனாலும் இன்றி தாஹிருக்கு பதிலாக ஹசல்வுட் வந்துள்ளார். டெத் ஓவர் தேவை என்பதால் ஹசல் உள்ளே வந்துள்ளார். இதன் காரணமாக தோனி தனது டெத் ஓவர் பிளானை இனி எளிதாக களமிறக்க முடியும். கடந்த போட்டி போல தோனி ஜடேஜாவை நம்பி இருக்க வேண்டியது இல்லை.