எப்படி
இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் விஷயங்கள் குறித்து மூத்த வீரர் இம்ரான் தாஹிர் பேட்டி அளித்துள்ளார். தமிழக வீரர் அஸ்வினின் யூ டியூப் சேனலுக்காக அவரிடம் பேசிய இம்ரான் தாஹிர் முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில்.. நான் இதுவரை பல கிரிக்கெட் அணியில் லீக் போட்டிகளில் ஆடி உள்ளேன்.
ஆனால் சென்னை
பல அணிகளில் ஆடி இருந்தாலும் என் இதயத்தில் இருந்து சொல்கிறேன். சென்னைதான் எப்போதும் சிறந்த அணி. உலகம் முழுக்க சென்று இருக்கிறேன். சென்னை மாதிரி ஒரு அணியை நான் பார்த்தது இல்லை. சென்னையை போல வேறு எந்த ஒரு அணி நிர்வாகமும் வீரர்களை மதித்து நான் பார்த்தது இல்லை .
என் குடும்பம்
சென்னை அணி என்னை மட்டுமின்றி என்னுடைய குடும்பத்தையும் நன்றாக பார்த்துக்கொண்டார்கள். சென்னை அணி ரசிகர்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக எங்கள் மீது அன்பை பொழிந்தனர். நாங்கள் சென்னையில் விளையாடிய போது அங்கு சூழ்நிலை, கலாச்சாரம் வேறு மாதிரி இருந்தது.
கலாச்சாரம்
சென்னை மக்களின் கலாச்சாரம் எனக்கும் பிடிக்கும். சிஎஸ்கே அணியில் நல்ல விஷயங்கள் நிறைய இருக்கிறது. சிஎஸ்கே அணி நிர்வாகம் உங்களின் ஆட்டத்தை எப்போதும் குறை சொல்லிக்கொண்டே இருக்காது. உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும். அதுதான் முக்கியமான விஷயம்.
எப்படி
நீங்கள் எப்படி ஆடினாலும் அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வீரர்களுக்கு கூல் ட்ரிங்ஸ் சுமந்து செல்வதை நான் பெருமையாகவே கருதுகிறேன். அணியில் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது. கடந்த சீசன்களில் டு பிளசிஸ் சிஎஸ்கே அணியில் இப்படி கூல் டிரிங்ஸ் சுமந்து சென்றார்.
மொத்த சீசன்
மொத்த சீசனும் கூல்ட்ரிங்ஸ் சுமந்து சென்றார். அது மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர் எப்படி உணர்ந்து இருப்பார் என்பதை இப்போது புரிந்து கொள்ள முடியாது. அவரிடம் இதுகுறித்து பேசினேன். 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஆட முடியும். சிஎஸ்கே அணியில் ஒருமுறை 4 வெளிநாட்டு வீரர்கள் செட்டாகிவிட்டால் வேறு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்.
கஷ்டம்
அணியில் தற்போது அதே நிலைதான் இருக்கிறது. சிஎஸ்கே அணியில் தற்போது ஏறத்தாழ 4 வீரர்கள் தேர்வாகிவிட்டனர். இதனால்தான் இந்த சீசனில் இதுவரை நான் இறங்கவில்லை. இதற்கு பின் வேறு காரணம் இல்லை. விரைவில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். வரும் போட்டிகளில் பார்க்கலாம் என்று இம்ரான் தாஹிர் பேட்டி அளித்துள்ளார்.