விலகினார்
தனது பேட்டிங் மீதும் தனிப்பட்ட ஆட்டம் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் தினேஷ் கார்த்திக் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகி உள்ளார்.கேப்டனாக இருப்பதால் தனிப்பட்ட பேட்டிங் மீது அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் தற்போது கேப்டன்சியை துறந்து இருக்கிறார்.
ஏன் இப்படி
தினேஷ் கார்த்திக் இப்படி கேப்டன்சியை துறக்க முக்கியமான காரணம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். தற்போது இந்திய அணியில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ளார். இதனால் தோனியின் கீப்பிங் இடமும், 5வது பேட்டிங் பொசிஷனும் காலியாக உள்ளது. இந்த இடத்தில் யார் இறங்குவார் என்று கேள்வி உள்ளது.
போட்டி
தற்போது தோனியின் இடத்தை நிரப்ப கடுமையான போட்டி நடந்து வருகிறது. கே. எல் ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷாப் பண்ட், சஞ்சு சாம்சன் என்று பெரிய பட்டாளமே தோனியின் இடத்தை நிரப்ப போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது. அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது. இதில் விளையாடும் இந்திய அணியில் யார் கீப்பராக இருக்க போவது என்று போட்டி நிலவி வருகிறது.
நிரூபிக்க வேண்டும்
இதனால் ஒரு பேட்ஸ்மேனாக தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தினேஷ் கார்த்திக் இருக்கிறார். இவருக்கு ஒரு நாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் ஐபிஎல் போட்டிகளில்தான் தன்னை நிரூபிக்க வேண்டும். ஆனால் கேப்டனாக இருந்து கொண்டு பேட்ஸ்மேனாக தன்னை நிரூபிக்க முடியாமல் தினேஷ் கார்த்திக் திணறுகிறார்.
காரணம்
இதனால்தான் எப்படியாவது தன்னை ஒரு பேட்ஸ்மேனாக நிரூபிக்க தினேஷ் கார்த்திக் முடிவு செய்துள்ளார். தோனியின் இடத்தை நிரப்ப திட்டமிட்ட தினேஷ் கார்த்திக் இந்த முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள். இதன் காரணமாகவே கேப்டன் பதவியை துறந்துவிட்டார். அதோடு 4வது இடத்திலும் பேட்டிங் இறங்கி உள்ளார். இனி கொல்கத்தா ஆட உள்ள மீதமுள்ள 6 போட்டிகளில் கண்டிப்பாக அதிரடி ஆட்டம் ஆட வேண்டிய கட்டாயத்தில் தினேஷ் கார்த்திக் இருக்கிறார்.