For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெளியே இருந்து கொண்டு ராஜ்ஜியம்.. கோலிக்கு சைலண்டாக செக் வைத்த ரோஹித்.. ஆடிப்போன 3 பேர்.. திருப்பம்!

துபாய்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்திய அணியில் தோனியின் இடத்தை நிரப்ப போகும் வீரர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதில் தற்போது ரோஹித் சர்மாவின் கை ஓங்கி உள்ளது என்கிறார்கள்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் தற்போது இந்திய அணியில் கீப்பருக்கான இடம் காலியாக உள்ளது.

இந்த இடத்தை நிரப்ப போகும் வீரர் யார் என்று கேள்வி உள்ளது. பல முக்கியமான வீரர்கள் தோனியின் இடத்தை பிடிக்க தீவிரமாக முயன்று வருகிறார்கள்.

தீவிரம்

தீவிரம்

ரோஹித், கோலி இரண்டு பேருக்கும் இடையில் இதனால் போட்டி நிலவி வருகிறது. அதாவது இந்திய அணியில் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் வீரரை கீப்பராக நியமிக்க இரண்டு பேருமே தீவிரமாக முயன்று வருகிறார்கள். இந்திய அணியின் கீப்பராக கே எல் ராகுலை கொண்டு வருவதற்கு கோலி தீவிரமாக முயன்று வருகிறார் .

ராகுல்

ராகுல்

கே. எல் ராகுலும் இந்த சீசனில் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இந்த சீசனில் அதிக ரன் எடுத்த வீரர் கே. எல் ராகுல்தான். அதனால் அவரை அணியில் எடுப்பதே சிறப்பாக இருக்கும். ஆனால் கே. எல் ராகுல் மிடில் ஆர்டரில் இறக்க உள்ளனர். அதாவது தோனியின் இடத்தில் இல்லாமல் அதற்கு முன்பாக இறக்க திட்டமிட்டு உள்ளனர்.

கண்டிப்பு

கண்டிப்பு

கோலிக்கு அடுத்து விஜய் சங்கர் இறங்கி வந்த இடத்தில் ராகுலை களமிறக்க முடிவு செய்துள்ளனர். கண்டிப்பாக ராகுல் இந்திய அணியில் இடம் பிடிப்பார். ஆனால் அவர் கண்டிப்பாக கீப்பராக இருக்க மாட்டார். இந்திய அணியில் புதிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் களமிறங்குவார் என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் அது இஷான் கிஷானாக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இஷான் கிஷான் நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக ஆடினார்.

கீப்பிங்

கீப்பிங்

இவர் நன்றாக கீப்பிங்கும் செய்கிறார். இளமையான வீரர், பண்ட் போல அவசரமாக ஆடி விக்கெட் ஆகும் வீரர் கிடையாது. ஓப்பனிங்கும் இறங்குவார். மிடில் ஆர்டரிலும் ஆடுவார். நல்ல பிட்னஸாகவும் இவர் இருக்கிறார். இதனால் இவரை அணியில் எடுத்து பயிற்சி கொடுத்தால் நீண்ட காலத்திற்கு சிறப்பாக கீப்பாராக இவர் செயல்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே தற்போது இஷான் கிஷான் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இவர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்திய அணியில் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தினேஷ் கார்த்திக், ராகுல், பண்ட் என்று மூன்று பேரின் கீப்பர் கனவை ரோஹித் காலி செய்ய போகிறாராம். பும்ரா, பாண்டியா பிரதர்ஸ் இந்திய அணியில் இருக்கிறார்கள். அதிலும் ஹர்திக் பாண்டியா, பும்ரா இருவரும் மிக முக்கியமான வீரர்களாக உள்ளனர். இந்த நிலையில் தற்போது கீப்பரும் கூட மும்பை இந்தியன்ஸ் வீரராக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்திய அணியில் கோலியை விட ரோஹித்தின் ராஜ்ஜியம்தான் அதிகமாக உள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Saturday, October 24, 2020, 12:55 [IST]
Other articles published on Oct 24, 2020
English summary
IPL 2020: Ishan Kishan will be a good choice to replace Dhoni in Team India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X