நேற்று எப்படி
நேற்று சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு ரூத்துராஜ், ராயுடு மற்றும் ஜடேஜா மூவரும் முக்கியமான காரணமாக இருந்தனர். அதிலும் ஜடேஜா கடைசி நேரத்தில் வந்து அதிரடி காட்டினார். ஃபிரி ஹிட் சிக்ஸர், கடைசி இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர் என்று ஜடேஜா 11 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.
சிஎஸ்கே வெற்றி
மிகவும் டென்ஷனான நேரத்தில் முகத்தில் கொஞ்சமும் உணர்ச்சியை காட்டாமல் அதிரடியாக சிக்ஸ் அடித்துவிட்டு, ஆட்டத்தை முடித்து கொடுத்தார். இந்த சீசன் முழுக்க சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா மிகவும் சிறப்பாக ஆடி உள்ளார். பல போட்டிகளில் சென்னை அணியை மோசமான தோல்வியில் இருந்தும், அவமானங்களில் இருந்தும் ஜடேஜாதான் காப்பாற்றினார்.
என்ன செய்தார்
நேற்று சிஎஸ்கே அணியை வெற்றிபெற செய்த பின் ஜடேஜா கேமராவை நோக்கி திரும்பி.. தன்னுடைய ஜெர்சியில் இருக்கும் தன் பெயரை காட்டினார். இவர் இப்படி தனது வெற்றியை கொண்டாட ஒரே ஒருவர்தான் காரணம்.. அது கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சிரேக்கர். ஜடேஜாவை நினைத்த போதெல்லாம் சஞ்சய் மஞ்சிரேக்கர் கிண்டல் செய்து வருகிறார்.
ஆஸ்திரேலியா
சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல உள்ள இந்திய டி 20 அணி அறிவிப்பு வெளியானது. இதில் ஜடேஜா இடம் பெற்று இருந்தார். ஜடேஜாவை டி 20 அணியில் சேர்த்ததை ஏற்க முடியாது என்று சஞ்சய் மஞ்சிரேக்கர் கிண்டல் செய்து இருந்தார். அவர் டி20 வீரர் கிடையாது என்று சஞ்சய் மஞ்சிரேக்கர் கூறி இருந்தார். இதற்குத்தான் தற்போது ஜடேஜா பதிலடி கொடுத்து.. தனது பெயரை கேமரா முன்பு காட்டி இருக்கிறார்.
நிலைமை என்ன
இப்போது மட்டுமல்ல இதற்கு முன்பே ஜடேஜா சஞ்சய் மஞ்சிரேக்கருக்கு பதிலடி கொடுத்தார்.ஜடேஜாவை குறைகளை உடைய வீரர் என்று சஞ்சய் மஞ்சிரேக்கர் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு உலகக் கோப்பை செமி பைனலில் ஜடேஜா அதிரடியாக பதிலடி கொடுத்தார்.
பதிலடி
மும்பை வீரர்களை தவிர வேறு யாரை பற்றியும் சஞ்சய் மஞ்சிரேக்கர் சரியாக பேசியது கிடையாது.சஞ்சய் மஞ்சிரேக்கரின் மோசமான தொடர் விமர்சனங்களால் இந்த முறை அவரை கமென்டரி பேனலில் எடுக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.