ஆனால் என்ன?
ஆனால் இன்னொரு பக்கம் பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல் மட்டும் அதிரடியாக ஆடி வந்தார். கேப்டன் என்ற பொறுப்பை உணர்ந்து தொடக்கத்தில் இருந்து கேஎல் ராகுல் அதிரடியாக ஆடினார். ஒரு பக்கம் வீரர்கள் விக்கெட்டுகளை இழந்து வந்தாலும் இன்னொரு பக்கம் கே.எல் ராகுல் அதிரடி காட்டினார்.
எல்லோரின் பவுலிங்
சென்ற போட்டி போல அவசரப்பட்டு விளையாடி அவுட்டாகாமல் இந்த போட்டியில் தொடக்கத்தில் நிதானமாக ஆடி போக போக அதிரடி காட்டினார். முதல் 70 ரன்கள் கொஞ்சம் நிதானமாக ஆடி, அதன்பின் வேகம் எடுத்தார் . அதிலும் களத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய சாஹல், சிவம் துபே ஆகியோர் ஓவரில் கூட கே. எல் ராகுல் அதிரடி காட்டினார்.
எத்தனை ரன்கள்
முதலில் பவுண்டரி அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார். 50 ரன்கள் அடிப்பதற்கு முன்பே 6 பவுண்டரிகளை விளாசினார். மொத்தம் இவர் 69 பந்துகள் பிடித்து 14 பவுண்டரிகள் அடித்தார். இன்னொரு பக்கம் அதிரடியாக 7 சிக்ஸர்களும் பறக்க விட்டார். மொத்தம் 132 ரன்கள் அடித்த கேஎல் ராகுலின் ஸ்டிரைக் ரேட் இந்த போட்டியில் 191.30 ஆகும்.
இதுதான் அதிகம்
இன்று கே. எல் ராகுல் அடித்த ஸ்கோர்தான் ஐபிஎல் போட்டியில் கேப்டன் ஒருவர் அடித்த அதிக ஸ்கோர் ஆகும். அதேபோல் இன்று அவர் அடித்த ஸ்கோர்தான் ஐபிஎல் போட்டியில் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிக ஸ்கோர் ஆகும். ஒரு கேப்டன் இப்படிதான் ஆட வேண்டும். அணியை முன்னின்றி வழி நடத்த வேண்டும் என்று பலரும் கே. எல் ராகுலை புகழ்ந்து வருகிறார்கள்.