2020 ஐபிஎல் தொடரில் மோசமான தொடக்கத்தாலும், தனிப்பட்ட பேட்டிங் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதாலும் கேகேஆர் கேப்டன் பதவியை தினேஷ் கார்த்திக் உலகக் கோப்பையை வென்ற இயான் மோர்கனிடம் ஒப்படைத்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2018இல் புதிதாக நியமிக்கப்பட்ட கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையில் சிறப்பாக செயல்பட்டது. எனினும், 2019ஆம் ஆண்டு மிக மோசமாக செயல்பட்டது. 2020இல் சிறப்பாக ஆட வேண்டி, ஏலத்தில் சில நல்ல வீரர்களை தேர்வு செய்தது அந்த அணி. சென்னை அணியைப் போன்றே, கொல்கத்தா அணிக்கும் விசுவாசமான ரசிகர் கூட்டம் உள்ளது. இரண்டு முறை கோப்பை வென்ற அந்த அணியில், போட்டியை மாற்றும் வல்லமை கொண்ட பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். கொல்கத்தா அணியின் விவரம் இங்கே.