கண்டனம்
இந்த நிலையில் இந்திய அணியில் சூர்ய குமார் யாதவை தேர்வு செய்யாததற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், நானாக இருந்தால் கண்டிப்பாக அணியில் எடுத்து இருப்பேன். ஐபிஎல்லை வைத்துதான் இந்த முறை இந்திய அணியை தேர்வு செய்துள்ளனர். கண்டிப்பாக இதனால் சூர்யாவை அணியில் எடுக்க வேண்டும். நிறைய போட்டிகளில் சூர்யா குமார் யாதவ் சிறப்பாக ஆடி இருக்கிறார்.
பாவம்
ஆனால் அவரை பாவம் அணியில் எடுக்கவே இல்லை. அவரும் எவ்வளவுதான் பண்ணுவார் . அவரும் எவ்வளவுதான் அடிப்பார். மும்பை அணிக்கு ஆடுகிறார், பல வருடமாக மும்பை அணியை வெற்றி பெற வைத்துள்ளார். பாவம் என்னதான் பண்ணுவான் அவன். வேறு என்னதான் பண்ணனும் அவன்.
பிரமாதம்
சூர்யா பேட்டிங் பிரமாதமாக இருக்குகிறது. எனக்காக அணியில் இடம் கொடுக்கவில்லை என்று சூர்ய குமார் ஆடிக்கொண்டு இருக்கிறார். தேர்வு குழுவிற்கு சொல்லிக்கட்டிக்கொண்டு இருக்கிறார். என்னை அணியில் எடுக்கவில்லையா? பாருங்க நான் எப்படி ஆடுகிறேன் என்று சூர்யா குமார் யாதவ் சொல்லிக் காட்டிக்கொண்டு இருக்கிறார்.
செம பேட்டிங்
எப்படி போட்டாலும் சூர்ய குமார் யாதவ் எல்லா திசையில் அடிக்கிறார். பாஸ்ட் பவுலர், லெக் ஸ்பின்னர், சாஹல், ஸ்டெயின் என்று எல்லோரையும் சூர்யா குமார் யாதவ் அடிக்கிறார். இவரை ஏன் அணியில் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.
சரியாக செயல்படவில்லை
நான் தேர்வுக்குழுவில் இருந்தால் சூர்யா குமார் யாதவை அணியில் எடுத்து இருப்பேன். மணீஷ் பாண்டேவை விட சூர்யா குமார் யாதவைதான் நான் அணியில் எடுத்து இருப்பேன். மணீஷ் பாண்டேவை விட சூர்யாதான் சிறப்பாக ஆடி வருகிறார். தேர்வுக்கு குழு சரியாக செயல்படவில்லை, என்று கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.