என்ன நடந்தது
ஆனால் பேட்டிங் இறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் இருந்து திணறி வந்தது. முதல் பந்திலேயே ஸ்டாய்னிஸ் டக் அவுட் ஆனார். அதன்பின் ரஹானேவும் 2 ரன்களில் அவுட் ஆனார். பின் தவானும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். வரிசையாக போல்ட் 2 விக்கெட்டுகளை முதல் பவர் பிளேவிலேயே எடுத்தார்.
எப்படி
டெல்லி அணி இப்படி மோசமாக திணறி வந்த நிலையில்.. இன்று மைதானத்திற்கு மலையாள ஹீரோ மோகன்லால் வந்திருந்தார். ஆடியன்ஸ் இருக்கும் பகுதியில் இருந்து மோகன்லால் மேட்ச் கண்டுகளித்து வருகிறார். இவர் கோட் அணிந்து மிகவும் ஸ்டைலாக இருந்தார்.
ஏன்
கொரோனா காரணமாக.. இந்த முறை ஐபிஎல் போட்டிகளை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே மைதானத்திற்குள் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் சிறப்பு அனுமதி பெற்று மோகன்லால் இன்று போட்டியை கண்டுகளித்தார்.
என்ன காரணம்
மைதானத்தில் இவரை பார்த்த பலரும்.. அட இவரா என்று ஆச்சர்யம் அடைந்தனர். துபாயில் படப்பிடிப்பு ஒன்றுக்காக மோகான்லால் சென்று இருக்கிறார். அங்கு இருந்து பைனல் போட்டியை காண்பதற்காக இவர் வந்துள்ளார்.