மோசம்
நேற்று போட்டியில் சிஎஸ்கேவின் தோல்விக்கு சொல்லப்படும் 100 காரணங்களில் 99 காரணம் கேதார் ஜாதவ்தான். இவரின் பேட்டிங், பீல்டிங் என்று எல்லாமே சிஎஸ்கே அணிக்கு எதிராகத்தான் இருந்தது. நேற்று ஜாதவ் 12 பந்துகள் பிடித்து வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் ஜாதவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
நிலைமை
அதிலும் இவர் தனது முதல் பந்தில் டொக் வைத்ததும் பெரிய அளவில் விமர்சனங்களுக்கு உள்ளானது. இதெல்லாம் போக ஒரே ஒரு பவுண்டரி அடித்துவிட்டு ''என்ன நான் அடிச்சு பவுண்டரி போகுதா... தப்பாச்சே'' என்று அடுத்த பாலே இவர் பேட்டை மாற்றியதும். அதன்பின் மீண்டும் டொக் வைத்ததும் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது.
மிக மோசம்
இந்த நிலையில் பேட்டிங் மட்டுமல்ல பீல்டிங்கிலும் இவர் மிக மோசமாக சொதப்பினார். நேற்று சாம் கரன் போட்ட ஓவர் ஒன்றில் இவர் பவுண்டரி விட்டது பெரிய சர்ச்சையானது. நன்றாக வந்த பந்தை பிடிக்க முடியாமல் இவர் பவுண்டரி விட்டார். இதை பார்த்து சுட்டி பையன் சாம் கரனே கோபம் அடைந்து.. ஜாதவை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.
ஏன் இப்படி
சாருக்கும் பேட்டிங்கும் வருவது இல்லை, பவுலிங்கும் செய்வது இல்லை, பீல்டிங்கும் சொதப்பல். ஆனாலும் இவர் ஏன் அணியில் இருக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதிலும் நேற்று கடைசி ஓவரில் ஜாதவ் ஜடேஜாவிற்கு ஸ்டிரைக் கொடுக்க மறுத்தார். ஜடேஜா சிங்கிள் கேட்டதற்கு ஜாதவ் கொடுக்க மறுத்து வெறும் டொக் வைத்தார்.
திமிர்
எதோ தான்தான் மேட்ச் பினிஷர் போல திமிராக செயல்பட்டார்.இதனால் கடைசியில் விரக்தி அடைந்த ஜடேஜா பெவிலியன் திரும்பும் போது, கோபமாக பவுண்டரி லைனை அடித்துவிட்டு சென்றார். ஒரே போட்டியில் நேற்று ஜாதவ் அடுத்தடுத்த பல தவறுகளை செய்தார். இதெல்லாம் சேர்ந்து மொத்தமாக சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணமாக மாறியுள்ளது.