ஹைதராபாத் அணி
2020 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி லீக் சுற்றில் படுமோசமான நிலையில் இருந்தது. பலரும் அந்த அணி பிளே-ஆஃப் செல்லும் என நினைக்கவில்லை. ஆனாலும், கடைசிப் மூன்று போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடம் பெற்றது.
எலிமினேட்டர் வெற்றி
அடுத்து பிளே-ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது. அந்த வெற்றியை அடுத்து இரண்டாம் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது ஹைதராபாத் அணி. அதில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
வெற்றி வாய்ப்பு
டெல்லி அணி கடந்த சில போட்டிகளில் மோசமாக செயல்பட்டு தோல்வி அடைந்துள்ளது. மேலும், லீக் சுற்றில் இரண்டு முறையும் டெல்லி அணியை ஹைதராபாத் வீழ்த்தியது. அதனால், இந்தப் போட்டியிலும் ஹைதராபாத் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சத்தியம் செய்த வார்னர்
இந்த நிலையில், ஹைதராபாத் அணி டெல்லி அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஐபிஎல் கோப்பை வென்றால் தான் ரசிகர்கள் விரும்பிய புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் ஆடுவேன் என சத்தியம் செய்தார். இது ஹைதராபாத் அணி ரசிகர்கள் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
டிக்டாக்
லாக்டவுன் நேரத்தில் டேவிட் வார்னர் தன் குடும்பத்தினருடன் டிக்டாக் செயலியில் இந்திய பாடல்களுக்கு நடனம் ஆடி வந்தார். அப்போது அவர் பிரபல தெலுங்கு திரைப்பட பாடலான புட்ட பொம்மா பாடலுக்கு மனைவியுடன் நடனம் ஆடியது வைரல் ஆனது.
என்ன சொன்னார் வார்னர்?
இந்த நிலையில் தான் வார்னர் தான் அதே பாடலுக்கு மீண்டும் நடனம் ஆடி குஷியில் ஆழ்த்துவேன் என சத்தியம் செய்துள்ளார். மேலும், சன்ரைசர்ஸ் அணியின் ரசிகர்கள் மற்றும் உரிமையாளர்கள் தன் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.