For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேச மறுத்த தோனி.. ரெய்னா சொன்ன அந்த வார்த்தை.. பிராவோ வெளியிட்ட வீடியோ.. சிஎஸ்கேவில் பரபர சம்பவம்!

துபாய்: சிஎஸ்கே அணியில் இருந்து அடுத்தடுத்து சீனியர் வீரர்கள் வெளியேறுவது நிறைய சந்தேகங்களை வரவைத்து உள்ளது. அடுத்தடுத்து முக்கியமான வீரர்கள் வெளியேறுவது ஏன் என்று கேள்விகள் எழுந்துள்ளது.

2020 ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு மிக மோசமான சீசனாக மாறியுள்ளது. எல்லா வருடமும் நன்றாக ஆடும் சிஎஸ்கே இந்த வருடம் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.

அதிலும் சிஎஸ்கேவின் பேட்டிங்தான் மிக மோசமாக சொதப்பி வருகிறது. சிஎஸ்கே அணியில் நிறைய வீரர்களை மாற்றி, மொத்தமாக அணியை புதுப்பித்தால் மட்டுமே அணியை மீட்டு எடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

என்ன நடக்கிறது

என்ன நடக்கிறது

சிஎஸ்கேவின் தோல்விக்கு வீரர்கள் பார்ம் இன்றி இருப்பது ஒரு காரணம் என்று பார்த்தால், இன்னொரு பக்கம் வீரர்கள் பலர் அணியில் இருந்து வெளியேறியதும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் இருந்து முதலில் ரெய்னாதான் வெளியேறினார். இவர் வெளியேறிய போது அதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டது

முதல் காரணம்

முதல் காரணம்

ரெய்னா தொடரில் இருந்து வெளியேற முதல் காரணம், அவரின் உறவினர்கள் கொள்ளையர்கள் மூலம் கொல்லப்பட்டதுதான். ரெய்னாவின் உறவினர்கள் சிலர் கொள்ளையர்கள் மூலம் கொல்லப்பட்ட காரணத்தால் ரெய்னா இந்தியா திரும்பினார். இன்னொரு பக்கம் ரெய்னா தனக்கு பால்கனி உள்ள அறை கிடைக்கவில்லை என்பதால் சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் மோதலில் ஈடுபட்டார் என்றும் கூறுகிறார்கள்.

மோதல்

மோதல்

ஆம் இந்த மோதல் அப்பட்டமாக வெளியே தெரிந்தது. சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் கூட, திறமை இருந்தால் சிலருக்கு திமிரும் வந்துவிடுகிறது. பணத்தை இழக்க போவது நான் இல்லை. அவர்தான் பணத்தை இழக்க போகிறார், என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்பின் ரெய்னா, ஸ்ரீனிவாசன் எனக்கு தந்தை போன்றவர், அவர் சொல்லும் விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன், என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தோனி இதை குறித்து வாயே திறக்கவில்லை.தோனி ஓய்வு பெறுவதை பார்த்து ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அப்படிப்பட்ட ரெய்னா ஐபிஎல் போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்க்கையே முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கும் போது ரெய்னாவை தோனி சமாதானம் செய்து அணியில் இருக்க சொல்ல வேண்டும்.

செய்யவில்லை

செய்யவில்லை

ஆனால் தோனியோ ரெய்னாவை பற்றி பேசவே விரும்பவில்லை. இதுவரை நடந்த 10 போட்டியில் ஒன்றில் கூட ரெய்னா பற்றி தோனி பேசவில்லை. ரெய்னாவும் டிவிட்டரில் பல வடிவங்களில் தூதுவிட்டு பார்க்கிறார், அணியை சமாதானம் செய்து பார்க்கிறார். ஆனால் தோனி ஒரு வார்த்தை கூட ரெய்னாவை பற்றி பேசுவது இல்லை. அதேபோல்தான் ஹர்பஜனும் சிஎஸ்கேவை விட்டு சென்றுவிட்டார்.

எப்படி

எப்படி

குடும்ப காரணங்களை குறிப்பிட்டு தொடரில் இருந்து ஹர்பஜன் வெளியேறிவிட்டார். இவர் தொடரில் இருந்து வெளியேறிய பின் அணியை குறித்தும், தோனி குறித்தும் கிண்டலாக சில விஷயங்களை குறிப்பிட்டார். ஆனால் தோனி இதற்கும் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. சிஎஸ்கே நிர்வாகம் ஹர்பஜனின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய போகிறது என்றும் தகவல்கள் வந்தது.

இப்போது பிராவோ

இப்போது பிராவோ

நிலைமை இப்படி இருக்க இன்னொரு மூத்த வீரர் பிராவோ தற்போது தொடரில் இருந்து வெளியேறுகிறார். காயம் காரணமாக வெளியேறும் பிராவோ.. நான் ஊருக்கு செல்கிறேன், சிஎஸ்கே அணி மீண்டு வரும் என்று நம்புகிறேன்.இந்த சீசனில் நாங்கள் சரியாக ஆடவில்லை. சிஎஸ்கே அணிக்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் என்று பிராவோ உருக்கமாக குறிப்பிட்டார்.

தோனி என்ன

தோனி என்ன

அணிக்குள் இத்தனை விஷயங்கள் நடக்கும் போது தோனி எதை பற்றியும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். பிராவோ, ரெய்னா போன்ற வீரர்களுக்கு மாற்று வீரர்களை கூட தோனி எடுக்கவில்லை. டிராஸ்ன்பர் செய்யும் முறையை கூட சிஎஸ்கே பயன்படுத்தவில்லை. உண்மையில் தோனிக்கு என்னதான் ஆனது என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Thursday, October 22, 2020, 9:09 [IST]
Other articles published on Oct 22, 2020
English summary
IPL 2020: Raina, Harbhajan, Bravo gone, What is happening with CSK and Dhoni?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X