For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவின் எதிர்காலத்தை மாற்றும் முடிவு.. 3 வீரர்களை நீக்கியது ஏன்? தோனியின் அதிரடி.. பரபர பிண்ணனி!

துபாய்: சென்னை அணியில் இன்று 3 முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டள்ளது. இதுதான் இனி சென்னை அணியில் ஆடும் லெவனாக இருக்க போகிறது என்று கூறுகிறார்கள்.

மும்பைக்கும் சென்னைக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று ஷார்ஜாவில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்துள்ளது.

இதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இன்று நடக்கும் போட்டியில் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆடவில்லை.

காயம்

காயம்

ரோஹித் சர்மா கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று அவர் ஆடவில்லை. இன்னொரு பக்கம் சென்னை அணியில் 3 பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 3 வீரர்கள் நீக்கப்பட்டு 3 வீரர்கள் அணிக்கு உள்ளே வந்து இருக்கிறார்கள். மொத்தமாக சிஎஸ்கே அணி இதனால் மாற்றம் அடைந்துள்ளது.

மாற்றம் என்ன

மாற்றம் என்ன

இன்று சிஎஸ்கே அணியில் இருந்து வாட்சன், ஜாதவ், சாவ்லா நீக்கப்பட்டு உள்ளனர். இன்னொரு பக்கம் இம்ரான் தாஹிர், என் ஜெகதீசன், ரூத்துராஜ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரும் எதிர்பார்த்த மாற்றம் அணியில் நடந்துள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

சிஎஸ்கேவில் இன்று நடந்து இருக்கும் மாற்றங்களுக்கு என்ன காரணம் என்று விவரம் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் வீரர் வாட்சன் சரியாக ஆடவில்லை. அதேபோல் இன்று இம்ரான் தாஹிர் உள்ளே வருவதால் ஒரு வெளிநாட்டு வீரரை நீக்க வேண்டும். ஸ்பீட் பவுலர் தேவை என்பதால் ஹசல் வுட்டை நீக்க முடியாது.

நீக்க முடியாது

நீக்க முடியாது

இதனால்தான் தற்போது வாட்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஓப்பனிங் வீரராக ஜெகதீசன் வந்துள்ளார். இன்னொரு பக்கம் மிடில் ஆர்டரில் பியூஸ் சாவ்லா நீக்கப்பட்டுள்ளதால் இன்னொரு இந்திய வீரரின் இடம் காலியாகி உள்ளது. இதற்கு பதிலாக தற்போது ரூத்துராஜ் அணிக்குள் வந்துள்ளார். ரூத்துராஜ் இன்று மிடில் ஆர்டர் பேட்டிங் செய்வார்.

தாஹிர்

தாஹிர்

இதெல்லாம் போக அணிக்குள் ஸ்பின் பவுலராக ஜாம்பவான் தாஹிர் இன்று அணிக்குள் வந்துள்ளார். சார்ஜா மைதானம் ஸ்லோ பிட்ச். இதன் காரணமாக இன்று தாஹிர் அதிகம் கவனிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் விமர்சனங்களை தொடர்ந்து தோனி இந்த முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள்.சிஎஸ்கேவின் எதிர்காலத்தை மாற்றும் முடிவாக இது இருக்கும்.. இனி வரும் காலத்தில் பிளேயிங் லெவன் இன்றைய ஆட்டத்தை பொறுத்தே இருக்கும் என்கிறார்கள்.

Story first published: Friday, October 23, 2020, 19:20 [IST]
Other articles published on Oct 23, 2020
English summary
IPL 2020: Reason behind three big changes in CSK team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X