மும்பை : ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை என்றால் வீரர்களிடம் சம்பள குறைப்பை மேற்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை என்றால் 4000 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 29ம் தேதி துவங்க திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள், காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் தற்போது காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்று இந்திய வீரர்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் வீரர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதே நம்பிக்கையில் பிசிசிஐயும் உள்ளது.
ஆஸ்திரேலியாவோட 5 டெஸ்ட் தொடர் சாத்தியமில்லை... சவுரவ் கங்குலி திட்டவட்டம்
இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படவில்லை 4000 கோடி ரூபாய் வரை பிசிசிஐக்கு இழப்பு ஏற்படும் என்று அதன் தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். மேலும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படவில்லை என்றால், வீரர்களுக்கு ஊதிய குறைப்பு நடவடிக்கையை பிசிசிஐ மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டால், ஊதிய குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் சமாளித்து விடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.