ஆனால் என்ன
ஆனால் ஆஸ்திரேலியா செல்லும் இந்த அணியில் மும்பை வீரர் சூர்ய குமார் யாதவ் இடம்பெறவில்லை. இவர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். தொடர்ந்து மூன்று வருடமாக இவர் சிறப்பாக ஆடியும் கூட இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஏன் இப்படி
இந்த நிலையில் சூர்ய குமார் யாதவை கோலி வேண்டுமென்றே அணியில் எடுக்கவில்லை. அரசியல் செய்கிறார் என்று புகார் உள்ளது. ரோஹித் சர்மாவிற்கு சூர்ய குமார் நெருக்கம்..அதனால்தான் களத்தில் கோலி சூர்ய குமார் யாதவிடம் கோபமாக செயல்படுகிறார். கோலிக்கு ஈகோ அதிகமாக இருப்பதால் இப்படி சூர்ய குமார் யாதவை புறக்கணிக்கிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
நீக்கம்
இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் கோலி சில போட்டிகளில் ஆட மாட்டார் எனபதால்.. இந்திய அணிக்குள் சூர்யா குமார் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்திய கேப்டன் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது. அவருக்கும் அனுஸ்கா சர்மாவிற்கும் அடுத்த மாதம் இறுதியில் குழந்தை பிறக்க உள்ளது.
வெளியேற்றம்
இதனால் கோலி டெஸ்ட் தொடரின் பாதியில் வெளியேற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அவரின் இடத்தில் சூர்யா குமார் யாதவை கொண்டு வர வேண்டும். மாற்று வீரராக சூர்யா குமார் யாதவை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
எப்படி
சூர்யா குமார் யாதவ் ஒன் டவுன் இறங்கி ஆட கூடிய வீரர். இவரை அணியில் எடுத்தால் தன்னை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும். அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் சூர்ய குமார் யாதவை பாராட்டி உள்ளார்.. இதனால் இதுதான் அவரை அணியில் எடுக்க சரியான நேரம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கூறியுள்ளனர்.