வங்கதேசம்
எப்போதும் ஐபிஎல் போட்டிகளில் வங்கதேச வீரர்கள் சிறப்பாக ஆடுவது வழக்கம். இந்திய பிட்ச்களில் இதற்கு முன் போட்டி நடந்த காரணத்தால் வங்கதேச வீரர்கள் இதில் சிறப்பாக ஆடினர். அதில் முக்கியமான வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான். வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளரான இவர் ஐபிஎல் தொடரில் தன்னை நிரூபித்து உள்ளார். 2016ல் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.
16 விக்கெட்
அந்த சீசனில் அவர் 16 விக்கெட் வீழ்த்தி ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு காரணமாக முஸ்தபிசூர் இருந்தார். இந்த நிலையில் இந்த முறை முஸ்தபிசூர் ரஹ்மானை அணியில் எடுக்க மும்பை மற்றும் கொல்கத்தா அணியில் முயன்றது. மும்பை அணியில் மலிங்கா விளையாடவில்லை. அதேபோல் கொல்கத்தா அணியில் ஹாரி குர்னே விளையாடவில்லை.
நீக்கம்
இதனால் இவர்களுக்கு மாற்றாக முஸ்தபிசூர் ரஹ்மானை அணியில் எடுக்க மும்பை, கொல்கத்தா இரண்டும் முயன்றது. இவருக்கு 1-2 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் இரண்டு அணிகளும் ஒப்பந்தம் செய்ய நினைத்தது. ஆனால் கடைசி நொடியில் இவருக்கு ஐபிஎல் விளையாடுவதில் இருந்து வங்கதேச அணி நிர்வாகம் தடை விதித்தது.
தடை
நீங்கள் ஐபிஎல் விளையாட செல்ல கூடாது என்று வங்கதேச அணி நிர்வாகம் முஸ்தபிசூர் ரஹ்மானிடம் கூறியுள்ளது. செப்டம்பர் மாதம் இலங்கை அணியுடன் வங்கதேசம் கிரிக்கெட் தொடரில் ஆடுவதாக இருந்தது. இதற்காக அந்த அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது. இதில் முஸ்தபிசூர் ரஹ்மான் தேர்வாகி இருந்தார்.
ஆனால் என்ன
இதனால் அவரை ஐபிஎல் விளையாட கூடாது என்று வங்கதேசம் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் கடைசி நொடியில் இலங்கை அணி நிர்வாகத்தின் கொரோனா விதிகள் காரணமாக மொத்தமாக வங்கதேச தொடர் நிறுத்தப்பட்டது. இதனால் முஸ்தபிசர் ரஹ்மான் ஐபிஎல்லும் விளையாட முடியாமல் , இலங்கைக்கும் செல்ல முடியாமல் போனது .
கோபம்
இதனால் முஸ்தபிசர் ரஹ்மான் வங்கதேச அணி நிர்வாகத்தின் மீது கோபத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். ஐபிஎல் விளையாடி இருந்தால் நான் பார்மில் இருந்திருப்பேன். ஒரு கோடி ரூபாய் பணமும் கிடைத்து இருக்கும் . ஆனால் கடைசியில் எதுவும் நடக்காமல் போய்விட்டது.. என்று அதிருப்தியில் இருப்பதாக கூறுகிறார்கள்.