சென்னை வெற்றி
நேற்று நடந்த போட்டியில் மும்பை அணியில் தொடக்கத்தில் இருந்த வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித், டி காக், சூரியகுமார் யாதவ் என்று வரிசையாக முக்கிய வீரர்களை விக்கெட்டுகளை இழந்தனர். ஆனாலும் 20 ஓவரில் மும்பை 162 ரன்கள் எடுத்தது.அதன்பின் களமிறங்கிய சென்னை அணி வரிசையாக தொடக்கத்தில் விக்கெட்டை இழந்தது. வாஅதன்பின் அம்பதி ராயுடு, டு பிளசிஸ் இருவரும் அதிரடியாக அம்பதி ராயுடு 71 ரன்களும், டு பிளசிஸ் 58 ரன்களும் எடுத்தனர்.
மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றி பெற்றது. 19.2 ஓவரில் சிஎஸ்கே 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை 162 ரன்கள் எடுத்த நிலையில் சிஎஸ்கே 166 ரன்கள் எடுத்து வென்றது.
என்ன காரணம்
இந்த போட்டியில் சென்னை சரியாக விளையாட காரணம், சென்னை தனது ஸ்பின் பவுலர்களை சரியாக பயன்படுத்திக் கொண்டதுதான். ஆம் அபுதாபி பிட்ச் பவுலிங் பிட்ச் என்பதால் சென்னை அணி ஜடேஜா, பியூஸ் சாவ்லா, சாம் கரன் என்று மூன்று ஸ்பின் பவுலர்கள் மற்றும் கூடுதலாக கேதார் ஜாதவ் என்ற நான்காவது ஸ்பின் பவுலரையும் வைத்து இருந்தது. ஆனால் மூன்று ஸ்பின் பவுலர்கள் மட்டுமே பவுலிங் செய்தனர்.
சூப்பர் பாய்ஸ்
அதிலும் தோனி தொடக்கத்தில் இருந்தே ஸ்பின் பவுலிங்கிற்கு வாய்ப்பு கொடுத்தார் . இரண்டாவது ஓவர் ஸ்பின் பவுலிங் கொடுத்தார். இதை மும்பை இந்தியன்ஸ் அணி சரியாக பயன்படுத்திக் கொண்டது. அதற்கு ஆனால மும்பை இப்படி ஸ்பின் பவுலிங்கை சரியாக பயன்படுத்தவில்லை. இரண்டாவதாக சென்னை அணியில் பல ஸ்பின் பவுலர்கள் இருக்கும் போது சென்னை அணி சாம் குரனை அணியில் எடுத்து.
சாம் குரன்
17ம் தேதிதான் இவர் அபுதாபிக்கு வந்தார் . ஆனால் அவரை உடனே அணியில் எடுத்து தோனி ஆட வைத்தார். அவரின் பவுலிங் ஸ்டைல் அபுதாபி பிட்சில் எடுபடும். அதேபோல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சாம் நல்ல பார்மில் இருந்தார். நேற்று இவரை அணியில் எடுத்ததும் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. அதற்கு அடுத்து மூன்றாவதாக, அம்பதி ராயுடுவிற்கு சென்னை டீம் கொடுத்த பயிற்சி.
அம்பதி ராயுடு
ஆம், அம்பதி ராயுடுவிற்கு 4வது நிலையாக ஆட சென்னை கடந்த இரண்டு வாரமாக பயிற்சி கொடுத்து இருக்கிறது. ரெய்னா இல்லை என்றாலும் அம்பதி ராயுடுவின் இடத்தை தோனி மாற்றவே இல்லை. மிடில் ஆர்டரில் விளையாட இவர்தான் சிறந்த தேர்வு. இவரை தவிர யார் மிடில் ஆர்டரில் ஆடினாலும் சரியாக இருக்காது. இவரை ஓப்பனிங்கும் இறக்க கூடாது என்று சென்னை நேற்று உறுதியாக இருந்தது. லெப்ட் பேட்ஸ்மேன்கள் நேற்று தொடக்கத்தில் இறங்கவே இல்லை.
நான்காவது திட்டமா
சென்னையின் இந்த பேட்டிங் லைன் அப் திட்டம் பலருக்கு ஆச்சர்யம் அளித்தது. நான்காவதாக தோனி எடுத்த அஸ்திரம்தான் இரண்டு லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன்கள். வரிசையாக முரளி விஜய், வாட்சன், டு பிளசிஸ், அம்பதி ராயுடு, என்று எல்லோரும் ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன் என்பதால் கேதார் ஜாதவ், தோனி களமிறங்காமல் கடைசி கட்டத்தில் ஜடேஜா, சாம் கரன் இருவரும் இறங்கினார்கள்.
பலன் கிடைத்தது
இவர்கள் இருவரும் களத்தில் இறங்கியது சென்னை அணிக்கு பெரிய பலம் கொடுத்தது. இரண்டு பேருமே குறைவாக ரன் எடுத்து இருந்தாலும் கூட குறைந்த பந்துகளில் அதிரடி காட்டி ரன் ரேட்டை கூட்டினார்கள். இதனால்தான் சென்னை அணியின் பேட்டிங் பவுலிங் இரண்டும் பெரிய அளவில் வலிமையாக இல்லையென்றாலும் கூட, மும்பையை சிஎஸ்கே எளிமையாக வீழ்த்தி இருக்கிறது.