என்ன கேள்வி
சென்னை அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஒரே ஒரு பேட்ஸ்மேன் மட்டும் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் சென்னை தற்போது தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறது. ராஜஸ்தானை குறைவாக மதிப்பிட கூடாது. அதனால் சென்னை அனைத்து விதங்களிலும் போட்டிக்கு தயார் ஆகி வருகிறது.
எப்படி
கடந்த போட்டியில் சென்னை மும்பை எதிர்கொண்ட போது பேட்டிங் சென்னைக்கு கை கொடுத்தது. அதேபோல் பவுலிங் தரப்பும் சிறப்பாக இருந்தது. டெத் ஓவரில் கொஞ்சம் ரன் சென்றது. ஆனாலும் கூட மொத்தமாக பவுலிங் சிறப்பாக இருந்தது.
ஆனால் பீல்டிங்
ஆனால் சென்னை அணியின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. பல வீரர்கள் சனிக்கிழமை போட்டியில் கேட்சை விட்டனர். முக்கியமான விக்கெட்டுகளை, கேட்ச் விட்ட காரணத்தால் சென்னை அணி சரியான நேரத்தில் எடுக்க முடியாமல் போனது. டு பிளசிஸ், ஜடேஜா மட்டுமே சரியாக பீல்டிங் செய்தனர்.
மோசமான பீல்டிங்
ஆனால் லுங்கி நிகிடி, முரளி விஜய் என்று யாருமே சரியாக பீல்டிங் செய்யவில்லை. பெரும்பாலான கேட்ச்கள் மிஸ் செய்யப்பட்டதாக ரசிகர்களே புகார் வைத்து இருந்தனர். இந்த நிலையில் சென்னை அணி தற்போது தீவிரமாக பீல்டிங் பயிற்சி செய்து வருகிறது. சார்ஜா மைதானம் பேட்டிங் செய்ய சாதகமான மைதானம்.
பேட்டிங் முக்கியம்
இங்கு சாதாரணமாகவே அதிக ரன்கள் செல்லும். இப்படிப்பட்ட நிலையில் பீல்டிங் மோசமாக இருந்தால் அதிக ரன்கள் செல்லும். இதனால் சென்னை வீரர்களுக்கு பீல்டிங் கோச் ராஜீவ் குமார் தீவிரமாக பயிற்சி அளித்து வருகிறார்கள். உடனே பீல்டிங் ஸ்டைலை மாற்றிக்கொள்ளுங்கள், அது மிக முக்கியம் என்று கடுமையாக சில வீரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.