என்ன நடந்தது
இந்த போட்டியில் நடந்த சம்பவம் ஒன்றுதான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டியில் ஆர்பிசி அணி பேட்டிங் செய்த போது ஹைதராபாத் வீரர் மிட்சல் மார்ஸ் காயம் அடைந்தார். அவர் ஐந்தாவது ஓவர் வீசிக்கொண்டு இருந்தார். அப்போது நான்காவது பந்து வீசியவர் கீழே விழுந்து காயம் அடைந்தார்.
கடைசி ஓவர்
இதனால் அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை விஜய் சங்கர் வீசினார். 28 வயதாகும் மிட்சல் மார்ஷ் காயம் காரணமாக மைதானத்தில் கடுமையாக அவதிப்பட்டார். அதன்பின் நடக்கவே முடியாமல் கஷ்டப்பட்டு நடந்து மைதானத்தை விட்டு வெளியே சென்றார். அவர் கடுமையான வலியில் துடித்தார்.
ஹைதராபாத் அணி
இந்த நிலையில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்த போது கடைசி கட்டத்தில், வரிசையாக விக்கெட் விழுந்தது. எல்லா வீரர்களும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் கடைசியில் வேறு வழி இல்லாமல், ஹைதராபாத் அணி மீண்டும் மிட்சல் மார்ஷை களத்திற்கு பேட்டிங் செய்ய அனுப்பியது.
மோசம்
ஆனால் களத்திற்கு பேட்டிங் செய்ய வந்த மிட்சல் மிகவும் சிரமப்பட்டார். பேட்டிங் செய்ய முடியாமல் பெரிய அளவில் அவர் கஷ்டப்பட்டார். இவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது என்று ரசிகர்கள் பலர் டிவிட் செய்தனர்.
நடக்க கூட முடியாமல் இருந்தவரை களத்திற்கு அனுப்பியது ஏன் என்று பலரும் நேற்று கேள்வி எழுப்பினார்கள்.
பேட்டிங் செய்தார்
நேற்று பேட்டிங் செய்ய வந்த மிட்சல் மார்ஷ், டக் அவுட்டாகி சென்றதும் குறிப்பிடத்தக்கது. இவர் களமிறங்கியது நேற்று பெரிய சர்ச்சையானது. அவருக்கு காலில் அடிபட்டு உள்ளது. அவரால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. காலில் அவரால் வெயிட் போட முடியாது. அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன், என்று அணியின் கேப்டன் வார்னர் தெரிவித்துள்ளார்.