வெற்றி
நேற்று சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர் அமித் மிஸ்ரா பீல்டிங் செய்த விதம் சந்தேகத்தை எழுப்பியது. இவர் பல பவுண்டரிகளை வேண்டுமென்றே விட்டது போல இருந்தது. ஈசியாக வந்த பந்துகளை கூட அமித் மிஸ்ரா மிஸ் செய்து பவுண்டரி விட்டார்.
மிஸ்ரா
பொதுவாக அமித் மிஸ்ரா சரியாக பீல்டிங் செய்ய மாட்டார். ஆனால் நேற்று இவரின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. முக்கியமாக ஸ்டோனிஸ் வீசிய 13வது ஓவரில் ராயுடு, ரெய்னா மாற்றி மாற்றி அதிரடியாக சிக்ஸ், பவுண்டரி என்று அடித்தனர். இதில் அமித் மிஸ்ரா நிறைய மிஸ் பீல்ட் செய்தார்.
கீப்பர்
முக்கியமாக கீப்பருக்கு பின் பக்கம் சென்ற பந்து ஒன்றை மிக மெதுவாக ஓடி தடுக்க முயன்றார். பந்தை தடுக்க வாய்ப்பு இருந்தும் கூட அதை தடுக்காமல் மிகவும் மெதுவாகவே அமித் மிஸ்ரா ஓடினார். பந்து மெதுவாக சென்று பவுண்டரியை தொடும் வரை ஜாக்கிங் செல்வது போல சென்றார்.
கேப்டன் பண்ட்
இதை பார்த்து டெல்லி கேப்டன் பண்ட் தொடங்கி எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். என்ன இவர் இப்படி பண்ணுறாரு.. இவருக்கு ஆட விருப்பம் இருக்கா இல்லையா என்று சந்தேகம் அடையும் அளவிற்கு இவரின் பீல்டிங் நேற்று மோசமாக இருந்தது. பண்டே இவர் மீது நேற்று கோபப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.