சென்னை
நேற்று போட்டியில் சென்னை அணியின் பவுலிங் போலவே டெல்லி அணியின் பவுலிங்கும் மோசமாகவே இருந்தது. முக்கியமாக டெல்லி ஸ்பின் பவுலர்கள் அமித் மிஸ்ரா, அஸ்வின் சரியாக வீசவில்லை. அவேஷ் கான், டாம் கரன் இருவரும்தான் கொஞ்சம் சுமாராக பவுலிங் செய்தனர். முக்கியமாக அஸ்வின் பவுலிங் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது.
வேரியேஷன்
எப்போதும் பவுலிங்கில் வேரியேஷன் காட்டும் அஸ்வின் நேற்று மோசமாக சொதப்பினார். அவரின் பவுலிங் ஸ்டைலில் வேரியேஷன் இருந்ததே தவிர, பவுலிங்கில் தனிப்பட்ட வகையில் வேரியேஷன் இல்லை. சரியான லைனில் போட முடியாமல் அஸ்வின் திணறினார். பந்து பெரிதாக ஸ்விங் ஆகவும் இல்லை.
அஸ்வின்
எப்போதும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு நன்றாக பவுலிங் செய்யும் அஸ்வின் நேற்று இடதுகை பேட்ஸ்மேன்களிடம்தான் மோசமாக சுருண்டார். நேற்று 4 ஓவர் வீசிய அஸ்வின் 47 ரன்கள் கொடுத்தார். ஒவ்வொரு ஓவருக்கும் கிட்டத்தட்ட 11 ரன்களுக்கும் அதிகமாக கொடுத்தார்.
ஸ்பின்
நேற்று அஸ்வினின் ஸ்பின் மேஜிக் சுத்தமாக வேலை செய்யவில்லை. பிட்ச் இவருக்கு எதிராக இருந்தது. இந்த ஐபிஎல் தொடர் மூலம் டி 20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இணையலாம் என்று அஸ்வின் நினைத்தார். ஆனால் முதல் ஆட்டமே அஸ்வினுக்கு எதிராக சென்றுள்ளது.
பிளான் காலி
ஐபிஎல் மூலம் தன்னை நிரூபிக்கலாம் என்ற அஸ்வினின் பிளான் காலியாகி உள்ளது. கண்டிப்பாக நேற்று போட்டியில் அஸ்வினின் மோசமான ஆட்டத்தை கோலி பார்த்து இருப்பார். அஸ்வினை விட வாஷிங்க்டன் சுந்தர் நன்றாகவே பவுலிங் செய்கிறார்.
சுந்தர் பேட்டிங்
அதோடு சுந்தரின் பேட்டிங்கும் சிறப்பாக இருக்கிறது. இதனால் அஸ்வினை விட சுந்தர்தான் கோலியின் முதல் சாய்சாக கண்டிப்பாக இருப்பார். எனவே டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஆடும் அஸ்வினின் கனவு கனவாகவே போக வாய்ப்புள்ளது.