அஸ்வின் விலகல்
கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு முன்னதாகவே டெல்லி அணி வீரர் அஸ்வின் தொடரில் இருந்து வெளியேறினார். இவரை தொடர்ந்துதான் அடுத்தடுத்து வெளியேறினர். தனது குடும்பத்தார் பலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் வெளியேறும் முடிவை எடுத்தார்.
பாதிப்பு
இவர் தற்போது குடும்பத்தாருக்கு நேர்ந்த பாதிப்புகள் குறித்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், நான் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தேன். அப்போது எனது குழந்தைகளுக்கு தீவிர காய்ச்சல் மற்றும் 3 - 4 நாட்களாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. என் மனைவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மருந்துகளை கொடுத்துள்ளார். எனினும் காய்ச்சல் குறையவில்லை.
தடுப்பூசி
பின்னர் என் மொத்த குடும்பத்திற்கும் உடல்நிலை பாதித்தது. என் தந்தை முதல் 5 நாட்கள் நன்றாக தான் இருந்தது. ஆனால் அதன் பிறகு அவரின் ஆக்சிஜன் அளவு குறைந்துகொண்டே போனது. அவரின் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கவே இல்லை. பின்னர் 2 கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட பிறகு தான் குணமடைந்தார். நான் உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன், தந்தையை காப்பாற்ற முக்கிய காரணமாக இருந்தது அந்த தடுப்பூசி மட்டும் தான்.
வலியுறுத்தல்
நீங்கள் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களால் உங்கள் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். குழந்தைகள் என்றும் அது பார்க்காது, உடனடியாக பாதிக்கும். இந்த கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டும் தான். எனவே தயவு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.