ஐபிஎல்
ஐபிஎல் தொடக்கத்தில் பெங்களூர் வீரர் தேவ்தத் படிக்கல் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். அதன்பின் அவர் குணமடைந்து அணியில் இணைந்தார். பின்னர் பெங்களூர் வீரர் டேனியல் சாம்ஸ் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டார்.
கொரோனா
இவர்களுக்கு முன்பாக கொரோனா காரணமாக அக்சர் பட்டேல் பாதிக்கப்பட்டார். டெல்லி அணியோடு இணைவதற்கு சில நாட்களுக்கு முன் இவருக்கு கொரோனா ஏற்பட்டது. இதையடுத்து இவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
மருத்துவமனை
முதலில் தனிமைப்படுத்தப்பட்ட அக்சர் பட்டேல் பின் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் இரண்டு வாரம் ஆகியும் இவர் உடல்நிலை சரியாகவில்லை. ஐபிஎல் தொடரில் இவருக்குத்தான் முதலில் கொரோனா வந்தது.
குணமாகவில்லை
ஆனால் இன்னும் இவருக்கு சரியாகவில்லை. தொடர்ந்து இவர் சிகிச்சை பெற்று வருவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவர் எப்படி இருக்கிறார், ஏன் இன்னும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை என்று ரசிகர்கள் இப்போதே கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். இவரின் உடல்நிலை குறித்து அப்டேட் எதுவும் வெளியிடப்படாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.