லலித் மோடி
2007-08இல் லலித் மோடி ஐபிஎல்- தொடரை உருவாக்கிய போது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஐஎம்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். அப்போது ஆண்டுக்கு 27 கோடி என்ற அளவில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது அளவுக்கு அதிகமான தொகை என துவக்கம் முதல் சர்ச்சை நிலவி வந்தது.
12 கோடி
2009இல் லலித் மோடியால் 33 கோடிக்கு ஒப்பந்தம் உயர்த்தப்பட்டு, பின் 28 கோடியாக குறைக்கப்பட்டது. முதலில் போடப்பட்ட பத்தாண்டு ஒப்பந்தம் 2017இல் முடிவுக்கு வந்த போது ஆண்டுக்கு கூடுதலாக 12 கோடி பெற்றது ஐஎம்ஜி.
பணி விலகல்
ஆனால், இதே காலகட்டத்தில் அந்த நிறுவனத்தில் பிசிசிஐயுடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் பலர் வேறு பணிகளுக்கு சென்று விட்டனர். அந்த நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் கேத்தரின் சிம்ப்சன் கடந்த மாதம் ஐபிஎல் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவி விலகினார்.
பிசிசிஐ முடிவு
இந்த நிலையில், இனியும் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்த பிசிசிஐ, கடந்த நான்கு நாட்கள் முன்பு அந்த ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக கூறி இருக்கிறது. இனி ஐஎம்ஜி நிறுவனத்துக்கு பதில் அதிகாரிகளை நேரடியாக நியமித்து ஐபிஎல் தொடரை நடத்த உள்ளது பிசிசிஐ.