விமானம் ரத்து
கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் இந்தியாவில் இருந்து விமானங்களுக்கு வரும் மே 15ம் தேதி வரை ஆஸ்திரேலிய அரசு தடைவிதித்துள்ளது. ஐபிஎல்-காக சென்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் மே15 வரை நாட்டில் நுழைய அனுமதி கிடையாது என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
கவலை
ஐபிஎல் தொடரில் ஏற்கனவே ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ரே டை உள்ளிட்டோர் ஆஸ்திரேலிய சென்றுவிட்ட நிலையில், ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட வீரர்கள், வர்ணனையாளர்கள், பயிற்சியாளர், ஊழியர்கள் என 40 ஆஸ்திரேலியர்கள் ஐபிஎல்-ல் சிக்கியுள்ளனர். இவர்கள் தற்போதைக்கு மாலத்தீவு, இலங்கைக்கு சென்று, அங்கிருந்து தாய் நாட்டிற்கு திரும்ப திட்டமிட்டு வருகின்றனர்.
நடவடிக்கை
இந்நிலையில் அவர்கள் நாடு திரும்புவது குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை அதிகாரி, நிக் ஹாக்லே, ஆஸ்திரேலிய வீரர்களை அழைத்து வருவதற்கு 2 விஷயங்களை செய்ய வேண்டும். முதலில் இந்தியாவில் இருந்து வெளியேற்றி இலங்கை, மாலத்தீவு ஆகிய இடங்களில் தங்கவைக்க பிசிசிஐ ஏற்பாடு செய்துவருகிறது. அங்கு அவர்கள் சிறிது நாட்கள் காத்திருப்பார்கள். அதே போல வேறு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா எனவும் பார்த்து வருகிறது.
காத்திருப்பு
2வது விஷயமாக வீரர்களை தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கவும் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மே 15ம் தேதிக்கு பிறகு ஆஸ்திரேலிய அரசு என்ன முடிவெடுக்க போகிறது என்பதற்காக காத்துள்ளோம். அனுமதி கிடைத்துவிட்டால் உடனடியாக வீரர்களை அழைத்து வர ஏற்பாடுகள் செய்துவிடுவோம் என தெரிவித்தார்.