நீக்க வேண்டும்
முக்கியமாக சரியான லைனில் பவுலிங் செய்ய முடியாமல் சாஹல் கடுமையாக திணறினார். சென்னை பிட்ச் ஸ்பின் பிட்ச் என்றாலும் சாஹல் அதில் சரியாக ஆட முடியாமல் சொதப்பினார். இதனால் சாஹலின் சகாப்தம் முடிந்தது. அவ்வளவுதான் இனி இவர் ஆட மாட்டார் என்று கூறப்பட்டது.
குல்தீப்
ஏற்கனவே குல்தீப் பார்ம் ஆகிவிட்டார். இந்த நிலையில் சாஹலும் பார்ம் ஆகிவிட்டார். இதனால் இந்திய அணியில் இருந்து இருவரையும் நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் அனைத்து விமர்சனங்களையும் மீறி தற்போது சாஹல் முழு பார்மிற்கு திரும்பி உள்ளார்.
பார்ம்
கொல்கத்தா அணிக்கு எதிராக சாஹல் இன்று மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து இருக்கிறார். சென்னை பிட்சை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மூன்று ஓவரில் இரண்டு விக்கெட் எடுத்துள்ளார். இன்று பெங்களூர் அணியில் குறைந்த ரன்களை கொடுத்த ஒரே வீரர் சாஹல்தான். இன்று சாஹல் வீசிய லைன், லென்த் எல்லாமே மிகவும் சிறப்பாக இருந்தது.
சாஹல்
முக்கியமாக பந்தை இவர் அதிகமாக பவுன்ஸ் செய்தது கொல்கத்தா பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தது. அதேபோல் நிறைய வேரியேஷனும் இன்று சாஹலிடம் இருந்தது. கடந்த இரண்டு வருடமாக இவரிடம் மிஸ்ஸான அந்த லெக் ஸ்பின் மேஜிக் இன்று சென்னை சேப்பாக்கத்தில் கைகொடுத்துள்ளது.