சென்னை அணிக்கு கடந்த சீசன் மிக மோசமான ஒன்றாய் அமைந்தது. குறிப்பாக ஐபிஎல் தொடங்கியது முதல் சென்னை அணி ப்ளே ஆஃப்-க்குள் நுழையாமல் போனது கடந்த சீசனில் மட்டுமே. எனவே ‘கேப்டன் கூல்’ தோனியின் தலைமையிலான சென்னை அணி இந்தாண்டு சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.