அரசியல் எண்ட்ரி
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மனோஜ் திவாரி நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலின் போதுதான் அரசியலில் காலடி எடுத்து வைத்தார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சிவ்பூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் தன்னை எதிர்த்து நின்ற பாஜக வேட்பாளர் ரத்தீன் சக்ரவர்த்தியை 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
வெற்றி
நடந்து முடிந்த தேர்தலில் படு தீவிரமாக களமிறங்கி பிரச்சாரம் செய்த அவருக்கு மேற்கு வங்க மாநிலத்தின் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் உறுதி மொழியுடன் பதவி ஏற்றுக்கொண்டார்.
விளையாட்டு முக்கியம்
விளையாட்டே முக்கியம்
முன்னதாக தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பேசியிருந்த திவாரி, நான் இந்த நேரத்தில் விளையாட்டு துறையை எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் நான் எப்போதும் விளையாட்டுகளையும், விளையாட்டு வீரர்களையும் மேம்படுத்துவதற்காக உழைப்பேன் என தெரிவித்திருந்தார்.
அனுபவ வீரர்
35 வயதாகும் மனோஜ் திவாரி இந்திய அணிக்காக 12 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஒரு நாள் போட்டிகளில் 287 ரன்களும், டி20ல் 15 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளார். அதே போல ஐபிஎல்-ல் 98 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1695 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.