சிஎஸ்கே முடிவு
ஆனால், 2021 ஐபிஎல் ஏலம் நடக்க உள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் நகர்வுகள் எதுவும் அந்த அணி இளம் வீரர்களை தேர்வு செய்ய முயல்வது போல இல்லை. மீண்டும் வயதான வீரர்களையே சிஎஸ்கே அணி நம்பி களமிறங்க உள்ளது.
நீக்கம்
2021 ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாக சிஎஸ்கே அணி முரளி விஜய், கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், பியுஷ் சாவ்லா, மோனு சிங், ஷேன் வாட்சன் ஆகியோரை நீக்கியது. இதை அடுத்து சிஎஸ்கே அணி இளம் வீரர்களை நோக்கி நகரப் போவதாக ரசிகர்கள் எண்ணினர்.
3 கோடி
ஆனால், கடந்த இரண்டு சீசன்களாக மோசமான பார்மில் இருக்கும் ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து வாங்கி உள்ளது சிஎஸ்கே அணி. அவரை 3 கோடி கொடுத்து சிஎஸ்கே வாங்கி இருப்பது பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. உத்தப்பா ஏலத்தில் பங்கேற்று இருந்தால் கூட இந்த முறை இத்தனை பிரியா தொகைக்கு எந்த அணியும் வாங்கி இருக்காது.
அதே கதை
சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ஒரு பேட்டியில் ஒரு மோசமான சீசன் காரணமாக சிஎஸ்கே அணி தன் திட்டத்தை மாற்றிக் கொள்ளாது என கூறி இருக்கிறார். அதாவது, சிஎஸ்கே அணி மீண்டும் வயதான வீரர்களைக் கொண்டே ஆடும் என அவர் கூறி இருக்கிறார். இது தவறான முடிவு என ரசிகர்கள் இப்போதே விமர்சனம் செய்யத் துவங்கி உள்ளனர்.