வாய்ப்பு
கடந்த இரண்டு போட்டியில் ரூத்துராஜ் மோசமாக ஆடி சொதப்பினார். டெல்லிக்கு எதிரான போட்டியில் ரூத்துராஜ் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன்பின் மீண்டும் பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். ஆனாலும் இன்று அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
மோசம்
இரண்டு முறை சொதப்பினாலும், இளம் வீரர் என்று நம்பி ரூத்துராஜுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் ரூத்துராஜ் இன்றும் சிஎஸ்கே அணியை ஏமாற்றி உள்ளார். சிஎஸ்கேகாவிற்காக களமிறங்கி வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி உள்ளார். இன்றும் அவரின் பேட்டிங் மோசமாக இருந்தது.
பேட்டிங்
சரியாக பந்தை கணிக்க முடியாமல் அவர் கஷ்டப்பட்டார். பந்து எப்படி வருகிறது என்று கூட ரூத்துராஜால் கணிக்க முடியவில்லை. சுத்தமாக ரூத்துராஜ் பேட்டிங்கில் இன்று கொஞ்சம் கூட ஸ்பார்க் இல்லை. கடந்த இரண்டு போட்டியிலும் அவரிடம் ஸ்பார்க் இல்லை. இதனால் நெட்டிசன்கள் இவருக்கு எதிராக கொதிக்க தொடங்கி உள்ளனர்.
கொதிப்பு
ரூத்துராஜை அணியில் இனியும் வைத்திருக்க கூடாது. அவரை நீக்க வேண்டும். அவர் தொடர்ந்து அணியில் இடம்பெற கூடாது. உத்தப்பாவிற்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் ரூத்துராஜ் கிழிக்க தொடங்கி உள்ளனர்.
தோனி
தோனியும் இதே திட்டத்தில்தான் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இன்று ரூத்துராஜுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு கடைசி வாய்ப்பு என்று கூறப்படுகிறது. இன்றும் அவர் சரியாக ஆடாததால் கண்டிப்பாக உத்தப்பாதான் ஓப்பனிங் இறங்குவார் என்கிறார்கள்.