மோசம்
நேற்று சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் வீரர் ருத்திராஜின் ஆட்டம் மோசமாக இருந்தது. இவர் 16 பந்தில் வெறும் 5 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடந்த போட்டியிலும் கூட ரூத்துராஜ் ஆட்டம் மிக மோசமாகவே இருந்தது. இரண்டு போட்டிகளாக ரூத்துராஜ் திணறி வருகிறது.
சையது முஷ்டாக்
சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும் இவர் மோசமாக சொதப்பினார். இதனால் இவரை மேலும் சிஎஸ்கே அணியில் வைத்திருக்க வேண்டுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இவருக்கு பதிலாக சிஎஸ்கேவில் ராபின் உத்தப்பாவை களமிறங்க வைக்கலாம்.
நல்ல பார்ம்
இவர் மிக சிறப்பான பார்மில் இருக்கிறார். ராபின் உத்தப்பா நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் கேரளா அணிக்காக ஆடினார். இதில் பல போட்டிகளில் 80+ ரன்களை எடுத்தார். தனது வாழ்நாளில் மிக சிறப்பான பார்மில் உத்தப்பா இருக்கிறார்.
1000 ரன்கள்
இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக 1000 ரன்களை எடுக்க வேண்டும் என்பதை எனது திட்டம் என்று உத்தப்பா கூறி இருந்தார். இதனால் இவரை ஆடும் அணியில் சிஎஸ்கே அணி இறக்கி பார்க்கலாம். பார்மில் இல்லாத ரூத்துராஜை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வைத்துவிட்டு உத்தப்பாவை கொண்டு வர சிஎஸ்கே திட்டமிடலாம்.