அசத்தல்
மொத்தம் 8 போட்டிகளில் ஆடிய ஆவேஷ் கான், 14 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்த 2வது வீரராக திகழ்கிறார். இந்நிலையில் இவர் தோனியின் விக்கெட்டை எடுக்க பண்ட் போட்ட ஸ்கெட்ச் குறித்து பேசியுள்ளார்.
தோனியின் அவுட்
டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்தாண்டின் முதல் போட்டியாக சென்னை அணியை எதிர்கொண்டது. இதில் தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவரை டக் அவுட்டாகி பெவிலியன் அனுப்பினார் ஆவேஷ் கான். அவர் வீசிய பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது.
பண்ட்-ன் ஸ்கெட்ச்
இதுகுறித்து தற்போது பேசிய அவர், ஆட்டத்தில் சில ஓவர்களே மீதம் இருந்தது. அப்போது தோனி கண்டிப்பாக அடித்துதான் ஆடுவார் என பண்ட்-க்கு தெரிந்தது. தோனி நீண்ட நாட்களாக விளையாடாததால் அதிரடி காட்டுவது கடினம் என்றும் பண்ட்-க்கு தெரிந்திருந்தது. எனவே அவர் என்னிடம் ஷார்ட் பாலாக போட சொன்னார். நானும் அதையே செய்தேன். கூறியதை போலவே தோனி அடித்து ஆட முயன்று இன்சைடு எட்ஜால் பவுல்ட் ஆனார்.
புத்திசாலித்தனம்
நான் பந்துவிச ஓடி வரும் போது, நான் கீப்பிங்கில் இருக்கும் பண்ட்-ஐ மற்றுமே பார்த்துகொண்டு இருப்பேன். பேட்ஸ்மேன் நான் என்ன பந்தை வீசப்போகிறேன் என என்னை மட்டுமே பார்ப்பார் வேறு எதையும் கவனிக்கமாட்டார். அந்த நேரத்தில் பண்ட்-க்கும் எனக்கும் எது போன்று பந்துவீசுவது என ரகசிய உடல்மொழி இருக்கும். அவர் யார்க்கர் போடச்சொன்னாலும் சரி, அவுட்சைட் போட சென்னாலும் சரி எங்களுக்கு ரகசிய உடல்மொழி உள்ளது எனத்தெரிவித்தார்.